Advertisment

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி - கோவையில் "Thang-Ta"போட்டிகள் இன்று தொடக்கம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் "Thang-Ta"போட்டிகள் இன்று துவங்கியது.

author-image
WebDesk
New Update
சசச
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் "Thang-Ta"போட்டிகள் இன்று துவங்கியது.

Advertisment

 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் நடத்தப்படும் இந்த போட்டிகள், "Phunaba Ama" மற்றும் "Phunaba Anishuba" என இரண்டு வகைகளில் நடத்தப்படுகிறது. இன்றும் நாளையும், தகுதிச் சுற்றுப் ("Elimination round") போட்டிகள் நடைபெறுகின்றன.  இதனைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறுகின்றன.

 

தேசிய அளவில் நடைபெறும் இந்த போட்டிகளில் ராஜஸ்தான், மணிப்பூர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து Thang-Ta விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வந்தனர். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளனர்.

 செய்தி: பி.ரஹ்மான், கோவை

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment