Advertisment

ஓ.பி.எஸ்.,-க்கு மீண்டும் பின்னடைவு: அ.தி.மு.க கொடி, சின்னம் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அ.தி.மு.க.,வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
New Update
Madras High Court to O Panneerselvam on AIADMK party flag symbol case Tamil News

தேர்தல் முடிந்த பிறகு, அ.தி.மு.க கொடி, சின்னம் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனக் கூறி, வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

O Panneerselvam | Madras High Court: அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், " ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. 

42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

உத்தரவு 

இந்த நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று திங்கட்கிழமை (மார்ச்-25) விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க.,வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தல் முடிந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனக் கூறி, வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

O Panneerselvam Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment