ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மனு பாக்கர் வெளியேற்றப்பட்டபோது தென்கொரியாவின் கிம் யெஜிக்கு 0.1 புள்ளிகள் பின்தங்கியிருந்தார். கிம் யெஜி இறுதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அதே நேரத்தில் மற்றொரு கொரிய வீராங்கனை ஓ யே ஜின் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆங்கிலத்தில் படிக்க:
அவரது டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பிஸ்டல் செயலிழப்பால் தடம் புரண்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 22 வயதான மனு பாக்கர் இரண்டு தென் கொரிய துப்பாக்கி சுடும் வீராங்கனைகளுக்கு அடுத்தப்படியாக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். ஒன்பது முறை உலகக் கோப்பைப் பதக்கம் வென்ற மனு பாக்கர், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்தியர் ஆவார்.
முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கின் முதல் நாளில், மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதிச் சுற்றுகளில் 580 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்தார். மனு பாக்கர், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதிப் போட்டியில் அதிக பெர்ஃபெக்ட் ஸ்கோரை (27) எடுத்திருந்தார்.
இந்த செயல்பாட்டில், மனு பாக்கர் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் போட்டியில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியை எட்டிய இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்! கடைசியாக 2004 ஆம் ஆண்டு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுமா ஷிரூர் என்ற இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை இறுதிப் போட்டிக்கு வந்திருந்தார்.
எந்தவொரு ஒலிம்பிக்கிலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/post_attachments/f3843d46-77d.jpg)
பாரீஸ் 2024க்கு முன்பு ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் வென்ற நான்கு பதக்கங்களில், எந்த ஒரு இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையும் பதக்கம் வென்றதில்லை. 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இருந்து இந்தியாவிற்கான கடைசிப் பதக்கங்கள் கிடைத்தன, அங்கு துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் (ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிளில் வெண்கலம்) மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர் விஜய் குமார் (ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டலில் வெள்ளி) ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.
ககன் நரங் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கிச் சுடும் குழுவின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“