பங்ளாதேஷ் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா உள்பட 3 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா

முன்னாள் பங்ளாதேஷ் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாக்கு கோவிட்-19 க்கு பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நஸ்முல் இஸ்லாம் மற்றும் நஃபீஸ் இக்பால் ஆகிய பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பங்ளாதேஷ் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாக்கு கோவிட்-19 க்கு பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நஸ்முல் இஸ்லாம் மற்றும் நஃபீஸ் இக்பால் ஆகிய பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mashrafe mortaza, cricketers covid, mashrafe mortaza covid, பங்களாதேஷ் கிரிக்கெட் வீர்களுக்கு கொரோனா தொற்று, கொரோனா வைரஸ், கோவிட்-19, bangladesh covid, cricket players covid, மஷ்ரஃப் மோர்டாசா, bangladesh cricket players tested covid-19 positive

mashrafe mortaza, cricketers covid, mashrafe mortaza covid, பங்களாதேஷ் கிரிக்கெட் வீர்களுக்கு கொரோனா தொற்று, கொரோனா வைரஸ், கோவிட்-19, bangladesh covid, cricket players covid, மஷ்ரஃப் மோர்டாசா, bangladesh cricket players tested covid-19 positive

முன்னாள் பங்ளாதேஷ் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாக்கு கோவிட்-19 க்கு பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நஸ்முல் இஸ்லாம் மற்றும் நஃபீஸ் இக்பால் ஆகிய பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

36 டெஸ்ட் போட்டிகள் 220 ஒருநாள் போட்டிகள், 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 36 வயதான மோர்டாசா, கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வெள்ளிக்கிழமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொற்று நாட்டில் வளரும் அவர் முதல் கிரிக்கெட் வீரர்கள் வங்காளம் இருந்து வைரஸ் ஒப்பந்தம் செய்துள்ளன செய்ய ஒன்றாக இருக்கிறது. பங்ளாதேஷில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வளர்ந்து வருவதால், அந்நாட்டில் முதலில் வைரஸ் தொற்று பாதித்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.

மோர்டாசா தனது பேஸ்புக் பக்கத்தில் “இன்று எனக்கு கோவிட்-19 பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யபப்ட்டுள்ளது. எல்லோரும் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சனிக்கிழமை மாலை எழுதியிருந்தார்.

கோவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காகவும் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவுவதற்காகவும் விதிகளில் இறங்கி தீவிரமாக பணியாற்றிய பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மோர்டாசா 2018இல் பங்ளாதேஷ் நரயில் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கோவிட்-19 தொற்றுநோய் பங்ளாதேஷை அடைந்ததிலிருந்து, மோர்டாசா தனது தொகுதியில் சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடி வருகிறார்.

28 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளராம நஸ்முல் இஸ்லாம், பங்ளாதேஷில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான தனது சொந்த ஊரான நரயங்கஞ்சில் உணவு மற்றும் பிற பொருட்களை விநியோகிப்பதில் ஈடுபட்டிருந்தார்.

11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமீம் இக்பாலின் மூத்த சகோதரர் நஃபீஸ் இக்பாலுக்கும் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பங்ளாதேஷில் கோவிட்-19 தொற்றால் 1400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளன.

Cricket Bangladesh Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: