கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கிரிகெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்துவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil