Advertisment

மைதானத்தை தாண்டிய தோனியின் இமாலய சிக்ஸர்.. ஷார்ஜாவில் ரசிகர் செய்த சுவாரஸ்ய சம்பவம்!

author-image
WebDesk
New Update
மைதானத்தை தாண்டிய தோனியின் இமாலய சிக்ஸர்.. ஷார்ஜாவில் ரசிகர் செய்த சுவாரஸ்ய சம்பவம்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2020) நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொம்புகளை பூட்டியபோது செவ்வாயன்று சின்னமான ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் 416 ரன்கள் எடுத்தது. ராயல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லரை வென்றது, ஆனால் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த போட்டியில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களுடன் தோல்வியுற்ற காரணத்தில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

Advertisment

ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சிறிய ஸ்டேடியமான ஷார்ஜாவில் நேற்று ரன் மழை பொழிந்தது எனக் கூறலாம். இரு அணிகளும் சேர்த்து 416 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவ நேரிட்டது.

இதனிடையே நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் தோனி முதலில் சரியாக விளையாடவில்லை. என்றாலும் கடைசி ஓவரில் வெளுத்து வாங்கினார். முன்னதாக டூப்ளிசி அவுட் ஆகும் வரை ஒரு சிக்ஸர் கூட அடிக்காத தோனி, இங்கிலாந்து பந்து வீச்சாளர் டாம் குர்ரான் வீசிய கடைசி ஓவரில், ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். மூன்று சிக்ஸர்களில் இரண்டு ஸ்டேடியத்துக்கு வெளியே சென்றன. கடைசி ஓவருக்கு 38 ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால், 3வது பந்தை சந்தித்த தோனி முதல் சிக்ஸரை அடித்தார். இதை தொடர் அடுத்த பந்திலும் தோனி இமாலய சிக்ஸர் விளாச பந்து ஸ்டேடியத்துக்கு வெளியே உள்ள சாலையில் விழுந்தது. அந்த சிக்ஸரின் தூரம் 92 மீட்டர்.

சாலையில் விழுந்த பந்தை ஒரு நபர் எடுத்துக்கொண்டு சிரித்து புன்னகையுடன் ஓடியது கேமராவில் சிக்கியது. ஆனால் அவர் பந்தை திரும்ப எறியவில்லை. அப்போது வர்ணனையாளர்களில் ஒருவர், ”ரசிகர் அதை திருப்பித் தரப்போவதில்லை. அவர் பந்தை வாழ்நாள் முழுவதும் மதிப்புமிக்க உடைமையாக வைத்திருப்பார்.” என்றார்.

சிஎஸ்கேக்கு நான்கு ஓவர்களில் 79 ரன்கள் தேவைப்பட்டபோது தோனி பேட்டிங் செய்ய வந்தார். முதலில் நன்றாக விளையாடாவிட்டாலும், கடைசி ஓவரில் அதை சரிக்கட்டினார். தோனி 17 பந்துகளில் எடுத்த 29 ரன்களுடன் சிஎஸ்கே 200 ரன்கள் எட்டியது. இந்த போட்டியில் இரு தரப்பினரும் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்திருப்பது புதிய சாதனையாகும். 2018 ஆம் ஆண்டில் ஒரு சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியில் அதிகபட்சமாக 33 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Ipl Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment