New Update
![MS Dhoni iconic No 7 jersey retired BCCI Tamil News](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/apOmskuxA3okqZHq4zod.jpg)
பிரபலமான ஜெர்ஸி நம்பர்களைக் கொண்ட தற்போதைய இந்திய வீரர்களில் விராட் கோலி (18) மற்றும் ரோகித் சர்மா (45) ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
பிரபலமான ஜெர்ஸி நம்பர்களைக் கொண்ட தற்போதைய இந்திய வீரர்களில் விராட் கோலி (18) மற்றும் ரோகித் சர்மா (45) ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
Ms-dhoni | bcci: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. அவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான (ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ) உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட ரெக்கார்டுகளையும் தகர்த்தெறிந்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni’s iconic No.7 jersey retired, no longer up for grabs
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டிற்கு முன்னாள் கேப்டன் தோனி செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் '7'-க்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஓய்வு அளித்துள்ளது.
இதன் மூலம் '7'ஆம் நம்பர் பொறித்த ஜெர்சியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக இந்திய முன்னாள் வீரர் சச்சினை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் '10'-க்கு பிசிசிஐ ஓய்வு அறிவித்திருந்தது.
“இளம் வீரர்கள் மற்றும் தற்போதைய இந்திய அணி வீரர்கள் எம்.எஸ் தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை எடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளனர். தோனியின் விளையாட்டுப் பங்களிப்பிற்காக அவரது டி-சர்ட்டை ஓய்வு பெறச் செய்ய பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. இனிமேல் எந்தவொரு அறிமுக வீரரும் வீரர் நம்பர் 7 ஐப் பெற முடியாது. மேலும், நம்பர் 10 ஏற்கனவே கிடைக்கக்கூடிய எண்களின் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டது, ”என்று வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பி.சி.சி.ஐ-யின் முடிவு இந்திய வீரர்களுக்கான தேர்வுகளை ஓரளவு கட்டுப்படுத்துகிறது. ஒரு விதியாக, ஐசிசி வீரர்கள் 1 மற்றும் 100 க்கு இடையில் எந்த எண்ணையும் எடுக்க அனுமதிக்கிறது. ஆனால் இந்தியாவில், விருப்பங்கள் குறைவாகவே உள்ளன. “தற்போது, 60-ஒற்றைப்படை எண்கள் இந்திய அணியில் உள்ள வழக்கமான வீரர்களுக்கும், போட்டியில் உள்ளவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு வீரர் அணியில் இருந்து ஓராண்டுக்கு வெளியே இருந்தாலும், புதிய வீரருக்கு அவரது எண்ணை வழங்க மாட்டோம். அதாவது ஒரு சமீபத்திய அறிமுக வீரர் தேர்வு செய்ய 30-ஒற்றைப்படை எண்கள் மட்டுமே உள்ளன,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 21 வயதான தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவில் அறிமுகமானபோது, அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் நம்பர் 19 பெற ஆர்வமாக இருந்தார். இருப்பினும், இந்திய வீரரும் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த எண் ஒதுக்கப்பட்டதால், அவர் 64 நம்பரை எடுத்துக்கொண்டார்.
ஜூனியர் லெவலில் கூட பிரபலமான நம்பர்களுக்கு சலசலப்பு நிலவுகிறது. அவரது U-19 நாட்களில், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் பேட்ஸ்மேனாக வலம் சுப்மான் கில், தனக்குப் பிடித்த நம்பர் 7 ஐப் எடுக்க முடியவில்லை. அவர் இறுதியில் நம்பர் 77 எடுத்துக்கொண்டார் . இந்திய மூத்த அணியில் இடம் பெற்ற பிறகும் அந்த நம்பரிலே தொடர்கிறார்.
பழம்பெரும் வீரர்களின் ஜெர்சி நம்பர்களை ஓய்வு பெற முடிவு செய்வது பழைய விளையாட்டு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இப்போது பல ஆண்டுகளாக, இத்தாலிய சீரி A கால்பந்து கிளப் நேபோலியில் யாரும் நம்பர் 10 ஐ அணிவதில்லை. ஏனெனில் இது அவர்களின் சிறந்த வீரருடன் எப்போதும் இணைக்கப்பட்ட எண் - டியாகோ மரடோனா, 1987 மற்றும் 1990 இல் லீக் பட்டங்களை ஒற்றைக் கையால் வென்றார். தி சிகாகோ புல்ஸ் மைக்கேல் ஜோர்டானுக்குப் பிறகு அவர்களின் நம்பர். 23 ஜெர்சியை ஓய்வுபெற செய்தது. மற்றொரு மரடோனா அல்லது எம்.ஜே இனி இருக்க முடியாது. எனவே, மற்றொரு நம்பர் 10 அல்லது நம்பர் 23 இருக்க முடியாது என்று, நபோலி மற்றும் சிகாகோவில் உள்ள ரசிகர்களிடையே உள்ள அதீத உணர்ச்சியின் ஒப்புதலாகவும் இந்த சைகை இருந்தது.
இதேபோல் பி.சி.சி.ஐ முதன்முதலில் சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10-க்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தபோதும் இதுவே எண்ணமாக இருந்தது. மீண்டும் 2017ல், மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் 10 ஆம் எண் அணிந்து களம் இறங்கினார். உடனடியாக சமூக ஊடகங்களில் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார். “ட்ரையிங் டு பி சச்சின்” - அப்போது டிரெண்டிங் ஹேஷ்டேக் ஆக இருந்தது. உடனடியாக பி.சி.சி.ஐ தலையிட்டு தாக்கூர் நம்பர் 54க்கு மாறினார்.
பிரபலமான ஜெர்ஸி நம்பர்களைக் கொண்ட தற்போதைய இந்திய வீரர்களில் விராட் கோலி (18) மற்றும் ரோகித் சர்மா (45) ஆகியோர் இருந்து வருகிறார்கள். இந்தியா விளையாடும் போது பெரும்பாலான ரசிகர்கள் 18 மற்றும் 45 நம்பர்களுடன் மைதானத்தில் காணப்படுகிறார்கள். கோலிக்கு மற்றும் ரோகித்தின் இந்திய அணி ஓய்வுக்குப் பிறகு அந்த ஜெர்சி நம்பர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.