Advertisment

10 நாட்கள் கெடு… தோனி வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தோனி தொடர்ந்த ரூ. 100 கோடி மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஜீ மீடியா இன்னும் 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MS Dhoni Madras High Court and Zee Media Tamil News

தோனி தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆதாரங்களுக்காக எழுப்பப்பட்ட குறுக்கு விசாரணை தான் என்றும் நீதிபதிகள் கூறினர்.

MS Dhoni Madras High Court and Zee Media Tamil News: கடந்த 2014ம் ஆண்டு, ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைக் கூறியதாக ஜீ மீடியாவிற்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வழக்கு தொடர்ந்தார். 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தோனி தரப்பில் முறையிடப்பட்டது.

Advertisment
publive-image

இதனையடுத்து, தோனி தரப்பில் எழுப்பப்பட்ட 17 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதவேன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தோனிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை செய்தியாக வெளியிடும் போது, மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தோனி தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆதாரங்களுக்காக எழுப்பப்பட்ட குறுக்கு விசாரணை தான் என்றும் நீதிபதிகள் கூறினர். எனவே, தோனி தரப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Sports Chennai Super Kings Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment