/tamil-ie/media/media_files/uploads/2019/07/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-18.jpg)
MS Dhoni
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, வரும் 31ம் தேதி முதல் காஷ்மீர் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தோனி பாராசூட் ரெஜிமெட்டில் நேற்று இணைந்தார். காஷ்மீரில் நடக்கும் பயிற்சியில், தோனி இடம்பெற்றுள்ளார். இந்தப் பயிற்சி ஜூலை 31ம் முதல் ஆகஸ்ட் 15ம் வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக தோனி இருந்து வருகிறார். அதனால் அவர் ராணுவத்தினருடன் சேர்ந்து, அவ்வப் போது கலந்துரையாடுவதுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். உலக கோப்பை தொடரில் விளையாடிய தோனி, அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெற போவதாக அறிவித்திருந்தார். அதற்கான பயிற்சியை நேற்றே தோனி தொடங்கிவிட்டார்.
ராணுவ தளபதி பிபின் ராவத், தோனியை 106வது தரைப் படைப் பிரிவில் இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப் படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற வீரர்களுடன் இணைந்து தோனி தங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரில் விளையாடிய தோனி, அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெற போவதாக அறிவித்திருந்தார். அதற்காக பாராசூட் ரெஜிமெண்டலில் தங்கி பயிற்சி பெற 1 மாதத்திற்கு முன்பு அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டு தோனி காஷ்மீர் புறப்பட்டு சென்றார்.
ராணுவ உடையில் தோனி மிடுக்காக காட்சியளித்த புகைப்படங்கள் நேற்று மாலை முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.