/tamil-ie/media/media_files/uploads/2018/04/a806.jpg)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராணுவ சீருடையில் பத்ம பூஷண் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, 'இசைஞானி' இளையராஜா உள்ளிட்ட பலருக்கு, கடந்த மாதம் 20-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை தொடங்கியது.
இதில், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்பட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ராணுவ சீருடையில் பத்ம பூஷண் விருதை ஜனாதிபதியிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.