Advertisment

'குழந்தை பிறக்கப் போகுது; மேட்ச்சை வேகமா முடிங்க': ஸ்பெஷல் ரெக்வஸ்ட் வைத்த தோனி மனைவி!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறப் போவது உறுதியாகி விட்ட நிலையில், எம்.எஸ் தோனியின் மனைவி சாக்ஷி சிறப்பு வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
MS Dhonis Wife Sakshi Makes Special Request to Chennai Super Kings Tamil News

7 பந்துகள் மீதமிருக்கும் போதே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து சென்னை அணியிடம் 134 ரன்களுக்கு சுருண்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai Super Kings | IPL 2024 | MS Dhoni: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 46-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 98 ரன்னும், டேரில் மிட்செல் 52 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

ஸ்பெஷல் ரெக்வஸ்ட் வைத்த தோனி மனைவி 

இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறப் போவது உறுதியாகி விட்ட நிலையில், எம்.எஸ் தோனியின் மனைவி சாக்ஷி ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார். அந்த பதிவில் தோனி கீப்பிங் நின்று இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "இன்று சீக்கிரம் போட்டியை முடித்து விடுங்கள். குழந்தை பிறக்கப் போகிறது. வலி எடுக்கத் துவங்கி விட்டது. இது அத்தையாகப் போகும் எனது கோரிக்கை" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சாக்ஷியின் சகோதரர் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இந்தப் பதிவை பகிர்ந்து இருந்தார். சென்னை அணியை விரைவாக வெற்றி பெறுங்கள் என அதிக நம்பிக்கையுடன் கூறி சாக்ஷி பகிர்ந்த இந்த பதிவு சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

publive-image

சாக்ஷியின் கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் போட்டி 18.5 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. 7 பந்துகள் மீதமிருக்கும் போதே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்களுக்கு சுருண்டது. சென்னை அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Ms Dhoni IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment