கோவையில் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக்: முதல் நாளில் அசத்திய 6 அணிகள்

கோவை வெள்ளாணைபட்டி அடுத்த மோளபாளையம் பகுதியில், நடைபெறும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், எனும் குதிரையேற்ற போட்டிகளில், முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை வெள்ளாணைபட்டி அடுத்த மோளபாளையம் பகுதியில், நடைபெறும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், எனும் குதிரையேற்ற போட்டிகளில், முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

author-image
WebDesk
New Update
horse 1

கோவையில் தேசிய அளவிலான 'இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' எனும் மாபெரும் குதிரையேற்ற போட்டி ஜூலை 5ம் தேதி துவங்கியது.

கோவை வெள்ளாணைபட்டி அடுத்த மோளபாளையம் பகுதியில், நடைபெறும் தேசிய அளவிலான  இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், எனும் குதிரையேற்ற போட்டிகளில், முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisment

கோவையில் தேசிய அளவிலான 'இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' எனும் மாபெரும் குதிரையேற்ற போட்டி ஜூலை 5ம் தேதி துவங்கியது. இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியின் துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

horse

லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு, நாட்கள் வெள்ளானைப்பட்டி-யை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 'தி இக்வெஸ்ட்ரியன்  க்ரஸ்ட்' வளாகத்தில், உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisment
Advertisements

இந்தியாவின் 6 மாநிலங்களில் இருந்து  இந்த மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியில் கலந்து கொண்டனர், அவை சென்னை புல்ஸ் தமிழ் நாடு அணியும், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் கேரளா அணியும், பெங்களூரு நைட்ஸ் என  கர்நாடகா அணியும், கோல்கொண்டா சார்ஜ்ர்ஸ் என தெலுங்கானா அணியும், குவாண்டம் ரெய்ன்ஸ் என கோவா அணியும், மற்றும் எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் என மேற்கு வங்காள அணிகளும் இப்போட்டிகளில் கலந்து கொண்டது. 

இந்த நிகழ்வில் நடைபெறும் குதிரை தடை தாண்டுதல் போட்டிகள், 110 சென்டிமீட்டர் மற்றும் 120 சென்டிமீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது. ஜூலை 5ம் தேதி, நடைபெற்ற போட்டிகளில், அனைத்து அணிகளின் வீரர்களும் குதிரை தடை தாண்டுதலின் முதல் சுற்றில் உற்சாகமாக தங்கள் குதிரைகளுடன் பங்கேற்றனர். ஜூலை 6ம் தேதி  இப்போட்டிகளின் இறுதி நாள். இதன் பின்னர் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 

horse

இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு பிரிவின் தலைவர் சக்தி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாட்டுகளை செய்திருந்தனர். முதல் நாளில் முதல் சுற்று 110 சென்டிமீட்டர் போட்டிகளில் கோவாவை சேர்ந்த துருவ்ராஜ் சிங் வகேலா 15.03 வினாடிகளில் தடைகளை தாண்டி முதலிடத்திலும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த வேத் சர்கார்  15.53 வினாடிகளில் தடைகளை தாண்டி இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு அணியை சேர்ந்த சூர்யா 16.22 வினாடிகளில் தடைகளை தாண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான்

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: