தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை மாணவர்கள் சாதனை

கூடோ விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருந்து கூடோவில் இன்னும் பல மாணவர்கள் சாதிக்க வாய்ப்புள்ளதாக கூடோ பயிற்சியாளர்கள் தெரிவித்தார்.

கூடோ விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருந்து கூடோவில் இன்னும் பல மாணவர்கள் சாதிக்க வாய்ப்புள்ளதாக கூடோ பயிற்சியாளர்கள் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Koodo competetion

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்ற கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூடோ விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருந்து கூடோவில் இன்னும் பல மாணவர்கள் சாதிக்க வாய்ப்புள்ளதாக கூடோ பயிற்சியாளர்கள் தெரிவித்தார்.

Advertisment

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று  தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்ற கோவையை சேர்ந்த  மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அண்மையில் தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டி நடைபெற்றது.

15-வது தேசிய அளவிலான அக்‌ஷய் குமார் தேசிய போட்டி மற்றும்  5-வது ஃபெடரேஷன் கோப்பைகளுக்கான போட்டியாக நடைபெற்ற 

Advertisment
Advertisements

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக அணி சார்பாக கோவை பிரேம் எம்.எம்.ஏ அகாடமியை சேர்ந்த 7 மாணவர்கள் இதில் பங்கு பெற்றனர்.
 
சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என பல்வேறு  பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கோவையை சேர்ந்த ஏழு மாணவர்கள் ஒரு தங்கம்,6 வெள்ளி,6 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை வந்த கூடோ வீர்ர்களுக்கு கோவை குனியமுத்தூர் பகுதியல் உள்ள பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி முன்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் தருண்,கௌதம் மற்றும் அனஸ்வர் ஆகிய மூவருக்கும் கோவை மாவட்ட கூடோ சங்க நிர்வாகிகள் பிரேம்,ஆனந்த்,ஆதாம் மற்றும் பிராங்க்ளின் ஆகியோர் மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொதுமக்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்  இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கூடோ விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இருந்து கூடோவில் இன்னும் பல மாணவர்கள் சாதிக்க வாய்ப்புள்ளதாக கூடோ பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: