/indian-express-tamil/media/media_files/2025/09/18/neeraj-chopra-failed-world-athletics-championships-2025-tamil-news-2025-09-18-17-49-02.jpg)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி இருந்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஜப்பான் தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இருந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற தகுதிச் சுற்றில் 84.85 மீட்டர் தூரம் மட்டுமே வீச வேண்டியிருந்தது. ஆனால், அவர் 84.03 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை வீசிய நிலையில் 8-வது இடம் பிடித்தார்.
இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதி பெறும் நிலையில் 8 -வது இடத்தை பிடித்ததால் நீரஜின் பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்தப் போட்டியில் டிரினிடாட் வீரர் கெஷோர்ன் வால்காட் 88.16 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெள்ளிப் பதக்கத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் சிறந்த வீரரான சச்சின் யாதவால் 4-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்தியாவின் முன்னணி வீரர்களான இரண்டு பேரும் பதக்க வாய்ப்பை பறிகொடுத்ததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல், ஒலிம்பிக் சாம்பியன் வீரரான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 10-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி இருந்தார். மேலும், ஜகார்த்தா 2018, ஹாங்சோ 2023 ஆசிய விளையாட்டு மற்றும் 2018 இல் கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us