/indian-express-tamil/media/media_files/AceVLV2wWGcWqAYnAAUj.jpg)
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ), நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தகுதி சுற்றின் குரூப் ஏ பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் மட்டுமே வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.
இந்த நிலையில், தகுதி சுற்றின் குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தி இருக்கிறார்.
8️⃣9️⃣.3️⃣4️⃣🚀
— JioCinema (@JioCinema) August 6, 2024
ONE THROW IS ALL IT TAKES FOR THE CHAMP! #NeerajChopra qualifies for the Javelin final in style 😎
watch the athlete in action, LIVE NOW on #Sports18 & stream FREE on #JioCinema📲#OlympicsonJioCinema#OlympicsonSports18#JioCinemaSports#Javelin#Olympicspic.twitter.com/sNK0ry3Bnc
ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) பகல் 11:55 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.