அக்.15ல் நவராத்திரி தொடக்கம்: இந்தியா - பாக்,. உலகக் கோப்பை போட்டி தேதி மாற்றம்? 

அகமதாபாத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளது.

அகமதாபாத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
ODI World Cup: India vs Pakistan game likely to be rescheduled, Oct 15 clashes with Navratri start Tamil News

India-Pakistan ODI World Cup Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் தர்மஷாலா உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. ஒவ்வொரு மைதானத்தையும் மேம்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலா 50 கோடி ரூபாய் என ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்

Advertisment

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 

publive-image

 தேதி மாற்றம் 

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் தேதியான அக்டோபர் 15க்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பி.சி.சி.ஐ-க்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை பி.சி.சி.ஐ மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisements

"எங்களிடம் உள்ள விருப்பங்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம், விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்தியா  - பாகிஸ்தான் போன்ற முக்கிய போட்டி, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெகுதொலைவில் இருந்து பயணித்து அகமதாபாத்தை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில், அவை நவராத்திரி காரணமாக நீட்டிக்கப்படும் என்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு முகமைகளால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அடையாளம் காண விரும்பாத பி.சி.சி.ஐ உயர் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் இருந்து வரும் செய்திகளின் படி, அங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் ஏற்கனவே அக்டோபர் மாத நடுப்பகுதி வரை அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், வீடுகளில் தங்கிருப்பது (ஹோம்ஸ்டே) போன்ற  விருப்பங்கள் கூட தீர்ந்துவிட்டதாகவும் கூறுகின்றன. விமான கட்டணமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு புதிய தேதி அறிவிக்கப்பட்டால், பெருமளவிலான ரத்துகள் ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றத்தையும், எரிச்சலையும் மற்றும் கோபத்தையும் கொண்டு வரும்.

publive-image

இதற்கிடையில், நேற்று செவ்வாய்கிழமை இரவு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஜூலை 27 அன்று டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் சங்கங்களுக்கு கடிதம் எழுதினார். இது வாரியம் அகமதாபாத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புக் கவலைகளை உறுப்பினர்களுக்குத் தெரிவித்து, போட்டிக்கான புதிய தேதியை இறுதி செய்யலாம் என்று அறியப்படுகிறது.

"குறிப்புகளை மாற்றுவதற்கும், விவாதம் மற்றும் முடிவு தேவைப்படும் எந்தவொரு பிரச்சினையையும் எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் மீண்டும் சந்திப்பது சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதன்படி, உலகக் கோப்பையை நடத்தும் சங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று அனைத்து மாநில சங்கங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports India Vs Pakistan Ahmedabad Worldcup

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: