Pudhiyathalamurai Tamizhan award for sports 2019???? pic.twitter.com/lBj1uYUaI7
— Anitha Pauldurai (@anithapauldurai) August 30, 2019
அனிதா பால்துரை, தனது இளமைக் காலத்தை இந்திய அணிக்காகவே அர்பணித்து சுமார் 18 ஆண்டுகள் (2000 – 2017) இந்திய அணிக்காக விளையாடியவர். இவர் கூடைப்பந்தாட்டத்தில் பந்தை மிக நேர்த்தியாக கையாளும் தனித்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர். அதோடு பந்தை ட்ரிபிள் செய்யும் விதம், கூடையை நோக்கி எயிம் செய்யும் பாங்கு, எதிரணி வீராங்கனையை கிராஸ் ஓவர் செய்து பந்தை கூடையின் உள்ளே அனுப்பும் விதம் என (NBA) என்பிஎ அணிகளில் விளையாடும் வீரருக்கு உள்ள அனைத்து தகுதிகளையும் பெற்றவர். இந்த தலைசிறந்த வீராங்கனை தேசிய அளவில் நடந்த போட்டிகளில் 30 பதக்கங்களைப் தட்டிச் சென்றுள்ளார். அதோடு ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டி போன்ற சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பல தங்கப் பதங்ககளை வென்றுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக ‘அர்ஜுனா விருது’ பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி இருந்த இவருக்கு, தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil