Advertisment

இந்தியாவிடம் படுதோல்வி; நன்றி சொன்ன பாக்,. பயிற்சியாளர்... காரணம் தெரியுமா?

'இந்தப் பரிசுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என இந்திய அணியிடம் பெற்ற தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
India vs Pakistan | Asia cup

பாகிஸ்தானின் பலவீனத்தை சுட்டிக்காட்டவும், அதனை இன்னும் நன்றாகச் சரிசெய்யவும் உதவிய ஒரு பரிசு என்று தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் கூறியுள்ளார்.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

Advertisment

இந்தியாவுக்கு நன்றி சொன்ன பாக்,. பயிற்சியாளர்

இந்த தொடருக்கான சூப்பர் 4 சுற்றில், கடந்த திங்கள்கிழமை நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ரோகித் (56) - கில் (58) ஜோடி அரைசதம் விளாசி ஆட்டமிழந்த நிலையில், பின்னர் வந்த விராட் கோலி (122) - கே.எல். ராகுல் (111) ஜோடி சதமடித்து மிரட்டினர். தொடர்ந்து 357 ரன்கள் துரத்திய பாகிஸ்தானை இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்நிலையில், இந்த படுதோல்வியை பாகிஸ்தான் அணி நேர்மறையாக எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் பலவீனத்தை சுட்டிக்காட்டவும், அதனை இன்னும் நன்றாகச் சரிசெய்யவும் உதவிய ஒரு பரிசு என்று தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் கூறியுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்க:- ‘We are grateful to India for the gift’, says Pakistan head coach after loss to Team India

இதுகுறித்து அவர் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாகக் கிடைத்த பரிசுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது என் உள்ளுணர்வு. உலகின் சில சிறந்த வீரர்களை நாங்கள் அடிக்கடி விளையாட முடியாது. 

கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை இழக்கவில்லை, எனவே நாம் ஒவ்வொரு நாளும் விளையாட வேண்டும் என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறோம். களத்தில்  எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும், இது உண்மையில் கடந்த இரண்டு நாட்களில் எங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நாங்கள் செய்யவில்லை.

ஆட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் நாங்கள் தோற்றோம். சாக்கு போக்குகள் இல்லை. கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் போதுமானதாக செயல்படவில்லை." என்று கூறினார். 

நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான கிராண்ட் பிராட்பர்ன் ஆலோசகராக வெற்றி பெற்ற பிறகு இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ஸ்காட்லாந்து தலைமை பயிற்சியாளர், அவர்களின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பணியாற்றுவதற்கு முன்பு 2018 முதல் 2020 வரை பாகிஸ்தான் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment