புரோ கபடி சாதனை வீரர் பர்தீப் திடீர் ஓய்வு: எல்லா அணிகளும் கைவிட்டதால் அதிர்ச்சி முடிவு

புரோ கபடி லீக் வரலாற்றில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரதீப் நர்வால், கபடியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புரோ கபடி லீக் சீசன்-12 ஏலத்தில் அனைத்து அணிகளும் கைவிட்டதால் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

புரோ கபடி லீக் வரலாற்றில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரதீப் நர்வால், கபடியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புரோ கபடி லீக் சீசன்-12 ஏலத்தில் அனைத்து அணிகளும் கைவிட்டதால் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

author-image
WebDesk
New Update
Pardeep Narwal

புரோ கபடி சாதனை வீரர் பர்தீப் திடீர் ஓய்வு: எல்லா அணிகளும் கைவிட்டதால் அதிர்ச்சி முடிவு

புரோ கபடிலீக் வரலாற்றில் (ProKabaddiLeague) 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரதீப் நர்வால், கபடியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். புரோ கபடி லீக் சீசன்-12 வீரர்கள் ஏலத்தில் அனைத்து அணிகளும் கைவிட்டதால் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். விளையாட்டு வர்ணனையாளர் சுனில் தனேஜாவுடன் நேரலை வீடியோவில் பேசியபோது, இந்த அறிவிப்பின் மூலம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இனி தன்னை ஒரு பயிற்சியாளராகக் காணலாம் என்றும் அவர் கூறினார்.

Advertisment

பாட்னா பைரேட்ஸ் அணியில் பிரதீப் நர்வால் 5 சீசன்கள் விளையாடிய காலத்தில், அந்த அணி 3 முறை புரோ கபடி லீக் பட்டங்களை வெல்ல முக்கியப் பங்காற்றினார். பின்னர், சீசன் 8-ல் யுபி யோதாஸ் அணிக்கு மாறினார். 28 வயதான இவர், புரோ கபடி லீக் வரலாற்றில் 1801 ரெய்டு புள்ளிகளுடன் (சராசரியாக ஒரு போட்டிக்கு 9.47 ரெய்டு புள்ளிகள்) அதிக ரெய்டு புள்ளிகளைப் பெற்ற வீரராகத் திகழ்கிறார். இருப்பினும், கடந்த 4 சீசன்களில் யுபி யோதாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்காக விளையாடியபோது, ரெய்டு புள்ளிகளுக்கான லீக்கின் முதல் 5 வீரர்களில் இடம்பிடிக்க பிரதீப் நர்வால் சிரமப்பட்டார்.

Pro Kabaddi Sports

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: