/indian-express-tamil/media/media_files/nt7AXNrYRGHWWtTgplZp.jpg)
பாரீஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Paris Olympics 2024 India Day 7 Live Updates
இந்நிலையில், பாரிஸ் ஓலிம்பிக் போட்டியின் 7-வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பாக்கர் மற்றும் இஷா சிங் கலந்து கொண்டனர். இதில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 வெண்கல பதக்கம் வென்று கொடுத்து அசத்திய மனு பாக்கர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார்.
முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் மனு பாக்கர் 2-வது இடம் பிடித்து அசத்தினார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர் 3-வது பதக்கத்தை தட்டிச் செல்வார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே வேளையில், மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் 18-வது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பேட்மிண்டனில், லக்ஷ்யா சென் தொடர்ந்து வேகத்தை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அவர் சௌ தியென் சென்னை எதிர்கொள்கிறார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.