10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, PBKS vs DC LIVE Cricket Score
இந்நிலையில், இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 66-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற டெல்லி பவுலிங் - பஞ்சாப் முதலில் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் பாப் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர் பிரியன்ஷா ஆர்யா 6 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர், பிரப் சிம்ரன் சிறிது நேரம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவரால் நீண் நேரம் நீடிக்க முடிவலில்லை. 18 பந்துகளை சந்தித்த அவர், 4 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஷ் - கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதில் ஸ்ரேயாஸ் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில், அதிரடியாக விளையாடிய இங்கிலிஷ் 12 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வாதரோ 16, ஷஷாங்சிங் 11 என சிறிய இடைவெளியில் வீழ்ந்தாலும், 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டொய்னிஸ் வந்த வேகத்தில் அதிடியில் இறங்கினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், 34 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 53 ரன்க்ள எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஒமர்சாய் 1, யான்சன் 0 என அடுத்தடுத்து வீழ்ந்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியில் அசத்திய ஸ்டொய்னிஸ் 16 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் முஸ்தாபிசூர் ரஹ்மான் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிகாம் 4 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும், குல்தீப், 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முகேஷ்குமார் 49 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 207 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், கே.எல்.ராகுல், பாப் டூபிளசிஸ் இருவரும் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்தபோது டூபிளசிஸ் ஆட்டமிழந்தார். 15 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கருண் நாயர் அசத்தாக விளையாடி ராகுலுக்கு ஒத்தழைப்பு கொடுத்தார்,
இதன் காரணமாக டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில், 21 பந்துகளை சந்தித்த ராகுல் 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சித்யூக்லா அடெல் 16 பந்துளில் 2 சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கருண் நாயர் அரைசதத்தை நெருங்கிய 27 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் டெல்லி அணி 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது விக்கெட்டுக்கு இணைந்த சமீர் ரிஸ்வி - ஸ்டப்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட ரிஸ்வி ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். 20-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்சர் அடித்த ரிஸ்வி வெற்றியை உறுதி செய்தார். 19.3 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
டெல்லி கேபிடல்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), செடிகுல்லா அடல், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முஸ்தாபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்