IPL 2025, PBKS vs LSG Live Score Updates: ஐ.பி.எல் 2025 தொடரில் 54-வது போட்டி ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட்டின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே தர்மசாலாவில் எச்.பி.சி.ஏ மைதானத்தில் இன்று (04.05.20225) இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா, பிரபுசிம்ரன் சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிரியன்ஷ் ஆர்யா 1 ரன்னில், ஆகாஷ் சிங் பந்தில் மயங்க் யாதவ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது, ஆகாஷ் சிங் பந்தில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.
பிரப்சிம்ரன் சிங் - ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி அதிரடியாக விளையாடினார்கள். அதிரடியாக அடித்த ஷ்ரேயஸ் ஐயர் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, திக்வேஷ் ரதி பந்தில் மயங்க் யாதவ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, நேஹல் வதேரா பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் அரை சதம் அடித்தார். நேஹல் வதேரா 16 ரன்னில் பிரின்ஸ் யாதவ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த சஷாங்க் சிங் அவர் பங்குக்கு அடித்து ஆடினார்.
அதிரடியாக ரன் குவித்த பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 91 ரன் எடுத்திருந்தபோது, திக்வேஷ் ரதி பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஏய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காத நிலையில், அர்ஷ்தீப் பந்தில் நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நிகோலஸ் பூரண் பேட்டிங் செய்ய வந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஏய்டன் மார்க்ரம் 15 ரன்கள் எடுத்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்தில் போல்ட் அவுட் வெளியேறினார். அடுத்து ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
நிகோலஸ் பூரண் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து ஆயூஷ் படோனி பேட்டிங் செய்ய வந்தார்.
ரிஷப் பண்ட் 18 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பந்தில் சஷாங்க் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பந்தில் சஷாங்க் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத், ஆயுஷ் படோனியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.
ஆயுஷ் படோனி 40 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்திருந்தபோது, யுஸ்வேந்திர சாஹல் பந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஆவேஷ் கான் பேட்டிங் செய்ய வந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அப்துல் சமத் மேக்ரோ ஜேன்சன்னிடம் காட் அண்ட் போல்ட் ஆனார். அடுத்து வந்த பிரின்ஸ் யாதவ் இருவரும் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பிளேஆஃப் சுற்று நெருங்கி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு முதல் நான்கு இடங்களுக்கான போட்டியில் களமிறங்குகிறது.
ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்று பிளேஆஃப் இடத்தை உறுதி செய்ய முடியும். அதே நேரத்தில், ரிஷப் பண்ட்டின் லக்னோ அணிக்கு அந்த அளவுக்கு சாதகமான நிலை இருக்காது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன், மோசமான ஃபார்மில் இருக்கும் ரிஷப் பண்ட் மற்றும் லக்னோ அணியும் தகுதி பெற எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியிருக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷசாங்க் சிங், அஸ்மதுல்லா ஒமர்ஜாய், மேக்ரோ ஜேன்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிச், பிரபுசிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் மில்லர், மிட்செல் மார்ஷ், ஏய்டன் மார்க்ரம், ஷாபாஸ் அஹமது, ஷர்துல் தாக்கூர், நிகோலஸ் பூரண், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.