/indian-express-tamil/media/media_files/2TvbdS1SSVan7EhupBoJ.jpg)
கடந்த சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடிய சச்சினை 2.15 கோடி ரூபாய்க்கு தமிழ் தலைவாஸ் முதல் நாள் ஏலத்தில் வாங்கியது
11-வது புரோ கபடி (பி.கே.எல் 2024) தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 88 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
'ஏ' பிரிவு வீரா்களுக்கு ரூ.30 லட்சம், 'பி' பிரிவு வீரா்களுக்கு ரூ. 20 லட்சம், 'சி' பிரிவு வீரா்களுக்கு ரூ.13 லட்சம், 'டி' பிரிவு வீரா்களுக்கு ரூ.9 லட்சம் அடிப்படை ஏல விலையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நடந்த 2-ம் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக புனே பல்டன்ஸ் அணி அஜித் வி குமாரை 66 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. பெங்களூரு புல்ஸ் அணி ஜெய் பகவானை ரூ. 63 லட்சத்துக்கு வாங்கியது.
ஆல்-ரவுண்டர் குர்தீப் பாட்னா பைரேட்ஸ் அணியால் ரூ.59 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். டிஃபென்டர் தீபக் ராஜேந்தர் சிங்கை ரூ.50 லட்சத்துக்கு பாட்னா பைரேட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
கடந்த சீசனில் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக விளையாடிய சச்சினை 2.15 கோடி ரூபாய்க்கு தமிழ் தலைவாஸ் முதல் நாள் ஏலத்தில் வாங்கியது. மொத்தம் 8 வீரர்கள் ஏலத்தில் இதுவரை ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.