12-வது புரோ கபடி லீக் தொடரை இன்றும் சனிக்கிழமை (மே 31), நாளையும் (ஜூன் 1) இரண்டு நாள் ஏலம் மும்பையில் நடைபெற உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஏலத்தில் 500 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவர்களில் சிறந்த வீரர்களை வசப்படுத்த 12 அணிகளும் தீவிரகமாக தயாராகி வருகிறார்கள்.
இந்த ஏலத்திற்கு முன்பு, மூன்று பிரிவுகளில் மொத்தம் 83 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதில் எலைட் பிரிவில் 25 பேரும், இளம் வீரர்கள் பிரிவில் 23 பேரும், புதிய இளம் வீரர்கள் பிரிவில் 35 பேரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்கள் ஏலம் மூலம் நிரப்பட உள்ளது.
கடந்த 11 சீசன்களில் இந்தியாவின் சிறந்த வீரர்களை வாங்க 12 அணிகளின் உரிமையாளர்கள் பெரும் தொகையைச் செலவிட்டுள்ளனர், மேலும் இந்த ஆண்டு ஏலம் பி.கே.எல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த இந்திய வீரருக்கான முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஏலத்தில் பவன் செஹ்ராவத், மனிந்தர் சிங், சச்சின் மற்றும் பர்தீப் நர்வால் போன்ற முன்னணி இந்திய வீரர்களுடன், முகமதுரேசா சியானே ஷாட்லூய் மற்றும் ஃபாசல் அட்ராச்சாலி போன்ற புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
வீரர்கள் பிரிவுகள்
ஏலத்தில் வீரர்களின் அடிப்படை விலைகள் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது பிரிவு ஏ, பி, சி, டி என வகைப்படுத்தப்பட்டுள்னர்.
- பிரிவு ஏ வீரர்களின் அடிப்படை விலை ரூ. 30 லட்சம்
- பிரிவு பி வீரர்களின் அடிப்படை விலை ரூ. 20 லட்சம்
- பிரிவு சி வீரர்களின் அடிப்படை விலை ரூ.13 லட்சம்
- பிரிவு டி வீரர்கள் ரூ 9 லட்சம் அடிப்படை விலையாகக் கொண்டிருப்பார்கள்
இந்த வீரர்கள் தங்கள் திறமைகளுக்கு ஏற்ப ஆல்-ரவுண்டர்கள், ரைடர்கள் மற்றும் டிஃபென்டர்கள் என மேலும் பிரிக்கப்படுவார்கள்.
தொகை
ஏலத்தில் உள்ள ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுப்பதற்கும் வாங்குவதற்கும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீரர் பர்ஸைக் கொண்டிருக்கும். இருப்பினும், அவர்கள் ஏற்கனவே யார், எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்து ஏல அட்டவணையில் அவர்களின் பர்ஸின் அளவு மாறுபடும்.
அணி
பி.கே.எல் 11 இல் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சம் 25 வீரர்களும் இருக்கலாம்.
அணியின் உரிமையாளர்கள் ஏற்கனவே 88 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளதால், வீரர்கள் ஏலத்தின் போது நிரப்பப்பட வேண்டிய இடங்கள் இப்போது 212 ஆகும்.
புரோ கபடி அணியில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்?
ஒரு பி.கே.எல் அணி தங்கள் அணியில் குறைந்தபட்சம் இரண்டு மற்றும் அதிகபட்சம் நான்கு வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்கலாம்.
பி.கே.எல் 12 ஏலத்தில் புதிய எஃப்.பி.எம் விதி என்ன?
ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் இந்த சீசனில் புதிய அணிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. விடுவிக்கப்பட்ட வீரர்கள் எஃப்.பி.எம் (இறுதி ஏலப் போட்டி) வழியின் மூலம் தங்கள் முந்தைய அணிகளுக்குத் திரும்பலாம்.
நேரலை
12-வது புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் மே 31 ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைனில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.