Advertisment

உங்களுடன் இன்றும், என்றும் துணை நிற்போம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு மோடி, ஸ்டாலின் ஆறுதல்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் போராடி தோல்வியுற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
INd vs aUs final.jpg

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை வென்றது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவ.19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா-  ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடக்கம்  முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. 

Advertisment

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  வார்னர், ஸ்மித், மார்க்ஷ என 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பின்னர் வந்த டிராவிஸ் ஹெட், லபுக்சசேன் அதிரடியாக விளையாடி, ஆட்டத்தை தங்கள் வசம் திருப்பினர். டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். லபுக்சசேன் அரை சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் லீக் சுற்று, அரையிறுதி சுற்று என அதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தயுள்ளது.  இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி தனது X பக்கத்தில், "உலகக் கோப்பை போட்டியில் உங்களின் திறமை, உறுதி குறிப்பிடத்தக்கது. மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி, தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது இந்திய அணி. நாங்கள் இன்றும், என்றும் உங்களுடன் துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள்!  அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக ஓடிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள். உங்களின் திறமை, ஆர்வம், உறுதி உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய அணிக்கு ஆறுதல் பதிவிட்டுள்ளார். "இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்து வருவதை நாம் வெல்வோம். உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

India India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment