/tamil-ie/media/media_files/uploads/2022/02/pragnanandha.jpg)
தமிழக வீரர் பிரக்ஞானந்தா
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தப் போட்டியில் கியூபா வீரர் ஐசான் ரெனால்டோவை தமிழக வீரர் பிரக்யானந்தா எதிர்கொண்டார்.
நேர்த்தியான நகர்த்தல்கள் காரணமாக போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சென்றது. இந்த நிலையில் பிரக்ஞானந்தா 41ஆவது நகர்த்தலில் கியூபா வீரர் ஐசான் ரெனால்டோவை தோற்கடித்தார்.
முன்னதாக ஆகஸ்ட் 2ஆம் தேதி ஸ்பெயின் வீரர் ஜெய்ம்க்கு எதிராக கருப்பு நிறக் காய்களுடன் களம் இறங்கிய பிரக்ஞானந்தா 85ஆவது நகர்த்தலில் வீழ்ந்தார். தமிழக வீரர் பிரக்ஞானந்தா இந்திய அணியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.