/indian-express-tamil/media/media_files/a9u2OmyLxIBqtcoCI8tO.jpg)
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது.
Prithviraj Tondaiman | Paris 2024 Olympics: 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் வருகிற ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் பிரிவுக்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்று இருப்பதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி குமாரியும், ஆண்கள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகாவும், ரைசா தில்லன் மற்றும் மகேஸ்வரி சௌஹான் ஆகியோரைத் தவிர, ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு பாரிஸிற்கான தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அனந்த்ஜீத் மற்றும் மகேஸ்வரி கலப்பு ஸ்கீட்டிலும் போட்டியிடுவார்கள். பெண்களுக்கான பிஸ்டல் ஒதுக்கீட்டில் ஒன்று மாற்றப்பட்ட நிலையில், பெண்கள் பிரிவில் இரண்டாவது போட்டியாளராக ஸ்ரேயாசி சிங் முன்மொழியப்பட்டுள்ளார்.
தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் முன்னதாக துப்பாக்கி மற்றும் பிஸ்டல் அணியை அறிவித்தது. 21 ஒதுக்கீட்டு இடங்களுடன், அனைத்து நாடுகளிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வெல்ல 25 வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.