11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்தப் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவிலும், 3-வது கட்ட ஆட்டங்கள் புனேயிலும் நடக்கிறது.
இந்தத் தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றுள்ன.
இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
புனேரி பல்டன் - ஹரியானா ஸ்டீலர்ஸ் மோதல்
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 9 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும் ஆட்டத்தில் புனேரி பல்டன் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 35-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. புனேரி அணி தரப்பில் பங்கஜ் கோயட் ஆகியோர் தலா 4 புள்ளிகளும், இனம்தர் 3 புள்ளிகளும், ஷிண்டே 2 புள்ளிகளும் எடுத்தனர். ஹரியானா அணி தரப்பில், வினய், சன்ஸ்கர் ஆகியோர் தலா 4 புள்ளிகள் எடுத்தனர்.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் புனேரி பால்டன் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 15 முறை சந்தித்துள்ளது. அதில் புனேரி பல்டான் 9 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது, ஹரியானா ஸ்டீலர்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.
கடைசியாக புனேரி பல்டன் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில், புனேரி பல்டன் 28-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“