/indian-express-tamil/media/media_files/roAhUZGU6mcZeVC3zA9X.jpg)
புரோ கபடி 2023 -24: புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதல்
Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா டிசம்பர் 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரம் உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள புனேரி பால்டன், 11ல் வெற்றி, 2ல் தோல்வி, 2 ஆட்டம் டிரா என 63 புள்ளிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேசமயம் தெலுங்கு டைட்டன்ஸ் 15 போட்டிகளில் 2ல் வெற்றியும், 14 முறை தோல்வியும் அடைந்து 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. ஆதலால், ஆறுதல் வெற்றி பெற தெலுங்கு டைட்டன்ஸ் போராடும். அதேநேரத்தில், புனேரி பால்டன் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடரவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே புனேரி பல்டான் அணி சிறப்பாக விளையாடியது. இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்கள் திணறினர். புனேரி பால்டன் அணியில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் புனேரி பல்டான் அணி 31 புள்ளிகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
புனேரி பால்டன் அணி 60 புள்ளிகளைப் பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 29 புள்ளிகளை மட்டுமே பெற்றது. புனேரி பால்டன் அணியில் அதிகபட்சமாக ஆகாஷ் 11 புள்ளிகளையும், மோகித் 8 புள்ளிகளையும் எடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக சஞ்சீவி 8 புள்ளிகளை எடுத்தார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.