Advertisment

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: காலிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா

6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று ஸ்குவாஷ் விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் தீபிகா 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Advertisment

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 1-3 என ஜோஷ்னா தோல்வியடைந்தார். இதனால், அவரும் வெண்கலப் பதக்கமே பெற்றார்.

அதேபோல், இன்று பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை ஃபிட்ரியானியை எதிர்கொண்டார். இதில், 21-16, 21- 14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா காலிறுதியை உறுதி செய்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பி.வி. சிந்து, இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியாவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-12, 21-15 என்ற நேர்செட்களில் பி.வி. சிந்து வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

தற்போதுவரை இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

Asian Games Saina Nehwal P V Sindhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment