Advertisment

தோனியின் கேப்டன்சியில் விளையாடுவது பெரிய கனவு; சி.எஸ்.கே-வில் சேர்ந்த நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திரா

ஐ.பி.எல் ஏலத்தில், சி.எஸ்.கே அணியில் சேர்ந்த, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, “2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை டிவியில் பார்த்தது முதல் தோனியின் கீழ் விளையாடுவது பெரிய கனவாக மாறியது” என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rachin Ravindra CSK

ரச்சின் ரவீந்திரா

ஐ.பி.எல் ஏலத்தில், சி.எஸ்.கே அணியில் சேர்ந்த, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, “2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை டிவியில் பார்த்தது முதல் தோனியின் கீழ் விளையாடுவது பெரிய கனவாக மாறியது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை (19.12.2023) துபாயில் வீரர்களின் மினி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 214 வீரர்களின் பெயர்களும் 119 வெளிநாட்டு வீரர்களின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் அதிகபட்சமாக 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியாவில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலந்து அணியில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா-வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 

நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவின் வரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. 

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணியில் இணைந்த ரச்சின் ரவீந்திரா,  “முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் விளையாட இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக உலகின் தலைசிறந்த வீரர்களான தோனி மற்றும் ஜடேஜா போன்ற சிறப்பான வீரர்களுடன் சென்னை அணியில் இணைந்து விளையாட இருப்பதை நினைத்தால் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பினை அளிப்பார்கள். மைதானத்தில் எப்படி உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்பது குறித்து எல்லாம் ஏற்கெனவே சி.எஸ்.கே அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் என்னிடம் நிறைய கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஆதரவிற்கு மத்தியில் நானும் சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன்” என்று ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். 

மேலும், ஐ.பி.எல் ஏலத்தில், சி.எஸ்.கே அணியில் சேர்ந்த, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, “2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை டிவியில் பார்த்தது முதல் தோனியின் கீழ் விளையாடுவது பெரிய கனவாக மாறியது” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

IPL 2024 Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment