டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் ரஃபேல் நடால். இந்நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினின் மலகா நகரில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிதான் அவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இந்தப் போட்டிக்குப் பின் முற்றிலுமாக டென்னிஸ் போட்டியில் இருந்து விலகி இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rafael Nadal announces retirement
38 வயதான ரஃபேல் நடால், சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். அவரை கோடிக்கணக்கான பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர் கடந்த 20 ஆண்டுகளில், 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் மொத்தமாக 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரபேல் நடால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்திய நடால், கடந்த மாதம் யு.எஸ் ஓபனில் இருந்து விலகினார், அதாவது 2024 இல் நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றை அவர் தவறவிட்டார். இதேபோல், நடப்பு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார்.
63 டென்னிஸ் தொடர் வெற்றிகள், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம், அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரஃபேல் நடால், தற்போது தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வந்துள்ளேன். உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு கடினமானவையாக இருந்தன. அதனால், என்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“