/tamil-ie/media/media_files/uploads/2021/08/neeraj-chopra-2.jpg)
டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பரபரப்பான செயல்பாட்டுடன் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது தனிநபர் தங்கத்தைப் பெற்ற பிறகு நீரஜ் சோப்ராவுக்கு வெகுமதி மழை பொழிகிறது. அரியானாவைச் சேர்ந்த 23 வயதான தடகள வீரர் தனது குறிப்பிடத்தக்க சாதனைக்காக பல மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டார்.
சனிக்கிழமை, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சிறப்பு ரொக்கப் பரிசாக ரூ. 2 கோடியை டோக்கியோவில் 87.58 மீ ஈட்டி எறிதலுக்கு விருது பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு அறிவித்தார். இந்திய இராணுவத்தில் பணியாற்றும் நீரஜ் சோப்ராவின் குடும்பம் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டதால், இந்தியா மற்றும் அனைத்து பஞ்சாபிகளுக்கும் இது ஒரு பெருமையான தருணம் என்று முதல்வர் கூறினார்.
குறிப்பாக, நீரஜ் சோப்ரா என்ஐஎஸ் பாட்டியாலாவில் அதிக நேரம் பயிற்சி செய்தார். முன்னதாக, அவர் 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று 88.07 மீ தூரம் எறிந்து, தற்போதைய தேசிய சாதனை படைத்தவர். அவர் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார் மற்றும் 86.48 மீ எறிதலுடன் U 20ல் உலக சாதனை படைத்தார்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவில் ஒரு இந்தியரின் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
நீரஜ் சோப்ராவுக்கு ரூ .6 கோடி ரொக்கப் பரிசும் கிடைக்கும் என்று ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் சனிக்கிழமை தெரிவித்தார். பஞ்ச்குலாவில் வரவிருக்கும் தடகளத்திற்கான சிறந்த மையத்தின் தலைவராக சோப்ரா நியமிக்கப்படுவார் என்றும் கட்டார் அறிவித்தார்.
ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.
Anbuden saluting the golden arm of India, for the Throw of the Century!
— Chennai Super Kings (@ChennaiIPL) August 7, 2021
8️⃣7⃣.5⃣8⃣ 🥇🔥
CSK honours the stellar achievement by @Neeraj_chopra1
with Rs. 1 Crore. @msdhoni
Read: https://t.co/zcIyYwSQ5E#WhistleforIndia #Tokyo2020 #Olympics #WhistlePodu 🦁💛 📸: Getty Images pic.twitter.com/lVBRCz1G5m
"அவரது சிறந்த சாதனையைப் பாராட்டும் மற்றும் மரியாதைக்குரிய அடையாளமாக, சிஎஸ்கே ரூ. 1 கோடியை நீரஜ் சோப்ராவுக்கு அளிக்கிறது” என்று சிஎஸ்கே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு சோப்ராவுக்கு ஒரு வருடத்திற்கு வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக இண்டிகோ அறிவித்தது.
ஒரு அறிக்கையில், இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா, "நீரஜ் உங்கள் குறிப்பிடத்தக்க சாதனையைப் பற்றி நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். நீங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள், அனைத்து இண்டிகோ ஊழியர்களும் எங்கள் விமானங்களில் ஒன்றில் உங்களை வரவேற்று உண்மையிலேயே கௌரவிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சாதனையைத் தொடர்ந்து, இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசாக ஞாயிற்றுக்கிழமை கல்வி நிறுவனமான BYJU அறிவித்தது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்கு விருதுகளைக் கொண்டு வந்த மற்ற ஆறு பதக்கதாரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் அறிவித்தது.
"விளையாட்டு துறைகளில் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், BYJU நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு 2 கோடியும், மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா, லோவ்லினா போர்கோஹெய்ன், பிவி சிந்து மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா 1 கோடியும் அறிவித்துள்ளது," என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.