Advertisment

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: 7 ஆண்டுகளுகுப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி; ரசிகர்கள் உற்சாகம்

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழக அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Ranji Trophy

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழக அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisment

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ரஞ்சி கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதைத் தொடர்ந்து, ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 3வது காலிறுதி ஆட்டம் தமிழ்நாடு அணிக்கும் சவுராஷ்டிரா அணிக்கும் இடையே கோவையில் நடைபெற்றது. 

இந்த போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 77.1 ஓவர்கள் விளையாடி 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தமிழ்நாடு அணி தரப்பில், சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிழக அணி நேற்று (24.02.2024) 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 100 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.  தமிழ்நாடு அணி தரப்பில் விஜய் சங்கர் 14 ரன், முகமது அலி 17 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். 

இதைத் தொடர்ந்து, 3ம் நாள் ஆட்டம் இன்று (25.02.2024) நடைபெற்றது. தொடர்ந்து, பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 119.4 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழ்நாடு அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதில் தமிழ்நாடு அணி தரப்பில் அதிகபட்சமாக இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்தனர்.

சவுராஷ்டிரா அணி 155 ரன்கள் பினதங்கிய நிலையில், 2வது இன்னிங்சைத் சவுராஷ்டிரா அணி தொடங்கியது. சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹார்விக் தேசாய் 4 ரன், கெவின் ஜிவ்ரஜனி 27 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன் 2 ரன், புஜாரா 46 ரன், அர்பித் வஸவதா 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சவுராஷ்டிரா அணி வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினார்கள். இதனால், ஆட்டத்தின் இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தமிழக அணி 33 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்திய தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியிருப்பதன் மூலம், 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அணி ரஞ்சி டிராபில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால், தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அளித்துள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ranji Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment