/tamil-ie/media/media_files/uploads/2020/12/ashwin.jpg)
"கிரிக்கெட் ஒரு தோல்வி விளையாட்டு," சச்சின் டெண்டுல்கர் கூட இதில் 30 சதவீத வெற்றி விகிதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார். பின்னர் அதை 35 ஆக சராசரியாக செய்தார் என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் மைதானத்தில் குவிந்திருந்த பள்ளி மாணவர்களிடம் கூறுகிறார். மேலும், இந்த ஏமாற்றங்கள் உலகிற்கு ஒரு புத்திசாலித்தனமான அறிமுகம் என கூறியுள்ள அவர், 10 வயது சிறுவர்களிடையே ஒரு சாத்தியமான சுழற்பந்து வீச்சாளரை ஈடுபடுத்துவதற்கான பொருத்தமான அறிவுரைகளை வழங்கினார்.
மற்றொரு வீடியோவில், மற்றொரு குழந்தை – இன்னும் இளமையாக உள்ள இந்த குழந்தையிடம், கையில் பந்துடன் உள்ள அஸ்வின் தனது களத்தைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்கும்போது, அந்த குழந்தை, வெட்கத்துடன் தனது பதிலை கூறி, தனது நண்பர்களை நோக்கி நகர்கிறது. தொடாந்து அஸ்வின், "எந்தப் பக்கத்தைத் தாக்குவது கடினம்? என்று கேட்கிறார். பின்னர் ஆன்சைடை சுட்டிக்காட்டி இங்கே ஒரு ஃபீல்டரைப் பயன்படுத்துங்கள், இல்லை. அவர் ஆஃப்சைடு வழியாக வந்தால், நீங்கள் அவருக்காக கைதட்டலாம் என குறிப்பிடுகிறார் ”
இந்த இரண்டு யூடியூப் வீடியோ காட்சிகளில், அஸ்வின் ஒரு சுழற்பந்து வீச்சாளரின் உலகத்தையும், தனது சுழற்பந்து வீச்சு கலையைப் பற்றியும் விவரிக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ள நிலையில், இந்த தொடரின் நான்கு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவார்" என்று இந்திய பிரீமியர் லீக் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அஸ்வினுடன் இணைந்து விளையாடிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆய்வாளர் பிரசன்னா அகோரம் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் அஸ்வின் சுழற்பந்துவீச்சு ரகசியத்தை வெளியிட்டார். "பேட்ஸ்மேன்கள் அவரது கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், இது அவர்களுக்கு நகர்த்துவதற்கு குறைந்த நேரத்தை கொடுக்கும். மேலும், அவர் மடிப்புகளில் சிறிது தங்குவர். அவர்களின் எதிர்வினை நேரத்தைக் குறைக்கிறது, அதுவே அவருடைய மிகப்பெரிய சொத்து. என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஆஸ்திரேலிய, பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா, அஸ்வின் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை தெரிந்துகொள்வது மிகப் பெரிய சவால். அவர் உங்களை எப்படி வெளியேற்ற முயற்சிக்கிறார், என்ன துறைகள் விளையாடுகின்றன என்பதை கனிப்பது ஒரு பேட்ஸ்மேனாக மிகப்பெரிய கஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து பிரசன்னா அகோரம் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் அஸ்வின், அதிக ஓவர்ஸ்பின் வீசுவார்," “ஆஸ்திரேலியாவில், ஒரு சுழற்பந்து வீச்சாளருக்குத் தேவையான பாதை, நீளம், வேகம் மற்றும் வரி. சிறந்த நீளம் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நீங்கள் மிக வேகமாக இருக்கவோ அல்லது மிகக் குறைவாகவோ விட முடியாது. "அஸ்வின் வழக்கமாக 82 கிமீ வேகத்தில் பந்து வீசுவார், இது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் நல்லது மேலும் ஓவர்ஸ்பினில் கவனம் செலுத்தினால், அவர் பேட்ஸ்மேன்களை வெல்ல முடியும்," என தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் நடைபெறும் அடிலெய்ட் மைதனத்தில், பிங்க்-பால் டெஸ்டில், அவர் லெக்-ஸ்பின் மற்றும் கேரம் பந்துகளை கூட முயற்சிப்பதை நீங்கள் காணலாம். "ஆஸ்திரேலியாவில் நிறைய டாட் பந்துகள் இருக்கும். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுவார்கள். அஸ்வினுக்கு அதற்கான திறமையும் நெஞ்சுரமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் குறைந்தது 20 விக்கெட்டுகளை எடுப்பார் என்பது எனது பந்தயம். என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.