10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 34-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின..
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆட்டத்தின்போது வெள்ளிக்கிழமை மழை பெய்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு, சுமார் 2 மணிநேரம் தாமதாக டாஸ் போடப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்த போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் சேய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி 1 ரன்னிலும், பிலிப் சால்ட் 4 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ரஜத் படிதார் 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், டிம் டேவிட் அதிரடியாக விளையாடி, 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியில் சாஹல், மார்க்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சேவியர் பார்லெட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம், 14 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
பிரியன்ஷ் ஆர்யா 16 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஹேசில்வுட் பந்துவீச்சில் ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
மறுபுறம், அதிரடியாக விளையாடிய நேஹால் வதேரா 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நடப்பு ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில், 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 5-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடந்த ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக மோதிய 2 ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.