சென்னையில் மோட்டார் ரேஸ்: ஏப்ரல் 12-ல் தொடக்கம்

சென்னையில் ஏப்ரல் 12 ஆம் தேதி மோட்டார் ரேஸ் நடைபெற உள்ளதாக கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதில் உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்று தங்களது திரில்லிங்கான சாகசம் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Red Bull Moto Jam Chennai on April 12 at Island Grounds Tamil News

சென்னையில் ஏப்ரல் 12 ஆம் தேதி மோட்டார் ரேஸ் நடைபெற உள்ளதாக கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ரெட்புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12 ஆம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Advertisment

இதில் அப்தோ பெகாலி (லெபனான்), அராஸ் கிபீசா (லிதுவேனியா) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திரில்லிங்கான சாகசம் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க உள்ளனர். மேலும் செபாஸ்டியன் வெஸ்ட்பெர்க் (கவாசாகி KX450), விவியன் கான்தர் (KTM SX450), தாமஸ் விர்ன்ஸ்பெர்கர் (கவாசாகி KX450) உள்ளிட்ட வீரர்களும் தங்களது  சாகசத்தை வெளிப்படுத்த உள்ளனர். 

ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டுகளை புக்மைஷோ-வில் பதிவு செய்யலாம். கடந்த பிப்ரவரி 22 முதல் டிக்கெட் ஆன்லனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுல்ய மிஸ்ரா பேச்சு 

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சி குறித்து  தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா பேசுகையில்,"மோட்டார் விளையாட்டு என்பது உற்சாகமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் துறையாகும், மேலும் தமிழ்நாடு விளையாட்டு சிறப்பில் எப்போதும் முன்னணியில் உள்ளது.

விளையாட்டுத் திறமையை வளர்ப்பதற்கும், அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுதிபூண்டுள்ளது. தீவு மைதானத்தில் 'ரெட் புல் மோட்டோ ஜாம்' நடத்துவது, உயர் திறன் கொண்ட அதிரடி விளையாட்டுகளை தமிழக மக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு படியாகும்." என்று அவர் கூறியுள்ளார். 

அராஸ் கிபீசா பேச்சு 

இந்த நிகழ்ச்சி தொடர்பாக லிதுவேனியா வீரர் அராஸ் கிபீசா பேசுகையில், "நான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன், இங்குள்ள ரசிகர்களின் ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே நம்பமுடியாதவை. இருப்பினும், சென்னை எனது பட்டியலில் இதுவரை நான் சேர்க்காத ஒரு நகரம். இறுதியாக ரெட் புல் மோட்டோ ஜாமில் இந்த துடிப்பான நகரத்திற்கு எனது ஸ்டண்ட்களை கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் முதல்முறையாக, பார்வையாளர்கள் டிரிஃப்டிங், எஃப்எம்எக்ஸ் மற்றும் ஸ்டண்ட் பைக்கிங் ஆகியவற்றின் அற்புதமான கலவையை ஒன்றாகக் காண்பார்கள்.

லெபனான் டிரிஃப்ட் சாம்பியன் மற்றும் கின்னஸ் உலக சாதனையாளர் அப்தோ ஃபெகாலியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் அவர் ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய டிரிஃப்டர்களில் சிலருக்கு ஒரு சிறப்பு 'டிரிஃப்ட் கிளினிக்கில்' வழிகாட்டியாகவும் இருக்கிறார். இது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும், மேலும் சென்னை மக்களுக்காக நிகழ்ச்சிகளை நிகழ்த்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: