Reminisce With Ash Harbhajan Singh wants to become farmer
Reminisce With Ash Harbhajan Singh wants to become farmer : கொரோனா வைரஸால் லாக்டவுனில் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் தங்களின் வாழ்நாளில் எதிர்பார்த்திராத லாக்டவுனை அனுபவித்து வருகின்றோம். இதே சூழலில் பலரும், தங்களின் எதிர்காலம் குறித்த திட்டத்தை பற்றி யோசித்து வருகின்றனர்.
Advertisment
கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்ஸ்டாகிராமில் பயங்கர பிஸியாக இருக்கிறார். Reminisce With Ash என்று தொடர் ஐ.ஜி. லைவில் தன்னுடைய விளையாட்டுத் துறை அனுபவம் குறித்து பேசி வருகிறார். 4ம் தேதி, ஹர்பஜன் சிங்கோடு நடத்திய உரையாடலில் ஹர்பஜன் சிங் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
கொரோனா முடிவுற்ற பிறகு, விவசாயியாக மாறி, உணவு பயிரிடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் விளைந்து வரும் பயிர்களை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவ இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மேலும், வீட்டில் இருக்கும் நபர்களுக்கு நேரம் செலவிடாமல் ஓடிக் கொண்டிருந்தோம். பணத்தை தேடி ஓடினோம். பேராசையுடன் வாழ ஆசைப்பட்டோம். ஆனால் கொரோனா ஒன்று வந்து, பணம் மட்டுமே முக்கியம் இல்லை என்ற பாடத்தை அனைவருக்கும் உணர்த்தியது.
நான் சம்பாதித்த பணத்தை என் வாழ்நாள் முழுவதும் செலவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு பணம் தற்போது தேவையில்லை. நமக்கு தேவையான ஒன்று அன்பும் அரவணைப்பும் தான். இதைத் தான் கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பணத்தை தேடி அலைந்தது போதும் என்று கருதுவதாகவும் அவர் அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil