ஜடேஜாவுக்கு மனைவி ஆதரவு: 'உங்கள் பாதையில் செல்லுங்கள்'
ஜடேஜா – தோனி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக பலரும் கருதி வரும் நிலையில், தற்போது ஜடேஜா மனைவியின் ட்விட்டர் பதிவு மோதல் போக்கை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.
ஜடேஜா – தோனி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக பலரும் கருதி வரும் நிலையில், தற்போது ஜடேஜா மனைவியின் ட்விட்டர் பதிவு மோதல் போக்கை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.
IPL 2023: “Follow your own Path”- Ravindra Jadeja's wife Rivaba on his cryptic 'Karma' tweet Tamil News
Ravindra Jadeja's Wife Rivaba Ravindrasinh Jadeja Reacts To His Cryptic Post After Alleged On-Field Spat With MS Dhoni Tamil News: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
Advertisment
ஜடேஜா - தோனி மோதல்
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியின் போது கேப்டன் தோனியும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் மைதானத்தில் லேசான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் ஜடேஜா வெறும் 7 பந்துகளில் 20 ரன்களை எடுத்து இருந்தாலும், பந்துவீச்சில் சொதப்பி இருந்தார். ஒரு விக்கெட் எடுத்த அவர் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார்.
குறிப்பாக, ஜடேஜாவின் பந்தில் டெல்லி கேப்டன் வார்னர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இது கேப்டன் தோனியை நிச்சயம் அதிருப்தியடைய செய்திருக்கும். அதனால்தான் போட்டி முடிந்தப் பிறகு ஜடேஜாவிடம் பேசிய தோனி, ”விருப்பம் இல்லையென்றால், அணியை விட்டு விலகிவிடு.” எனக் கூறியதாக கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
மேலும், இந்த சீசனில் நடந்த லீக் போட்டிகளின் போது, ஜடேஜா சீக்கிரம் அவுட் ஆகினால் தோனி என்ட்ரி கொடுப்பார் என்பதற்காக, ரசிகர்கள் தான் விளையாடும் போது சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என பிராத்தனை செய்வதாகவும், அப்போது ‘தோனி, தோனி’ என ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்புவது தன்னை புண்படுத்தி விட்டன என்றும் ஜடேஜா அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். ஆனால் அதனையும் அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
தவிர, இந்த போட்டி முடிந்தப் பிறகு பேசிய தோனி, ”தனிப்பட்ட ரெக்கார்ட்டுக்கு விளையாடும் வீரர்கள் அணிக்கு தேவையில்லை. இந்த அணிக்காக ஆடும் வீரர்கள் மட்டும்தான் தேவை. ” என அதிரடியாக பேசியிருந்தார். இதன் மூலம் ஜடேஜாவை தோனி குத்திக்காட்டிதான் பேசியிருக்கிறார் என கருதப்படுகிறது.
ஜடேஜா ட்வீட்
இந்நிலையில், ஜடேஜா தனது ட்விடட்டர் பதிவில், ‘இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ கர்மா நிச்சயம் திருப்பித் தரும்’ என்று பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் தோனியைக் குறிப்பிட்டு தான் இப்படி பதிவிட்டுள்ளார் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தோனி அடிக்கடி குறிப்பிடும் ‘Definitely’ வார்த்தையை ஜடேஜா தனது கேப்சனில் குறிப்பிட்டுள்ளார் எனவும், அதனால் அவர் தோனியைத் தான் நிச்சயம் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜடேஜாவின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது மனைவி ரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜாவும் சமூக ஊடகங்களில் தனது கணவரின் பதிவை ரீட்வீட் செய்து, "உங்கள் சொந்த பாதையை பின்பற்றுங்கள்.." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜடேஜாவின் ட்விட்டர் பதிவால் ஜடேஜா – தோனி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக பலரும் கருதி வரும் நிலையில், தற்போது அவரது மனைவி ரிவாபாவின் ட்விட்டர் பதிவு அவர்களுக்கு இடையே மோதல் போக்கு இருப்பதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. மேலும், அடுத்த சீசனில் இருந்து ஜடேஜா சி.எஸ்.கே-வில் இருந்து விலக வாய்ப்பிருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.