ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் பாணியில் இந்திய மண்ணில் இந்த ஆண்டு முதல் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) தொடங்குகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) முதல் மும்பையின் அந்தேரி விளையாட்டு வளாகத்தில் தொடங்கும் இந்தத் தொடரில் டெல்லி ரெட்ஸ், ஐதராபாத் ஹீரோஸ், கலிங்கா பிளாக் டைகர்ஸ், சென்னை புல்ஸ், மும்பை ட்ரீமர்ஸ், பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் களமாடுகின்றன.
இந்நிலையில், ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் அணியின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெங்களூரு அணியின் இணை கேப்டன்களாக நியூசிலாந்து ஜாம்பவான் வீரர் ஸ்காட் கரி மற்றும் ஸ்பெயின் கேப்டன் போல் பிளா வேகு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸின் இணை கேப்டன்களான ஸ்காட் கரி மற்றும் போல் பிளா வேகு ஆகிய இருவரும் பேசுகையில், "வரவிருக்கும் ரக்பி பிரீமியர் லீக்கிற்காக நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும் தொடக்க சீசனில் பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்குவது நாங்கள் மிகவும் எதிர்நோக்கும் ஒரு பொறுப்பு. எங்கள் அணியில் சர்வதேச ரக்பி மற்றும் அற்புதமான இந்திய வீரர்கள் குழுவிலிருந்து சில பெரிய பெயர்கள் உள்ளன, மேலும் எங்கள் பிரச்சாரத்தைத் தொடங்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளனர்.
ரக்பி பிரீமியர் லீக்கில் பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸை வெற்றிகரமான தொடக்க சீசனுக்கு இட்டுச் செல்லும் நம்பிக்கையுடன் உலகின் சிறந்த அணிகளுக்குத் தலைமை தாங்கிய ஸ்காட் கரி மற்றும் போல் பிளா வேகு ஆகியோர் தங்கள் சொந்த அனுபவத்தை அணிக்கு கொண்டு வருவார்கள். ரக்பி செவன்ஸ் ஆட்டத்தில் சிறந்த வீரராக ஸ்காட் கரி தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அவர் ஆல் பிளாக்ஸ் செவன் என்று பரவலாக அறியப்படும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர். அவரது தலைமையிலான அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. ரக்பி 7 போட்டிகளில் நியூசிலாந்து பதக்கம் வென்றது அதுவே முதல்முறையாகும். இதேபோல், ஸ்பெயினின் ரக்பி 7-ஸ் அணியின் கேப்டன் போல் பிளா வேகு, தனது தலைமையிலான அணியை சிறப்பாக வழிநடத்திய கொண்டவர்.
இது தொடர்பாக பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸின் இணை உரிமையாளர் சஞ்சித் ஷெட்டி பேசுகையில், "நியூசிலாந்து, பிஜி, ஸ்பெயின், உகாண்டா, ஹாங்காங், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஜாம்பவான்களுக்கும், மிகவும் புகழ்பெற்ற மற்றும் திறமையான பயிற்சியாளர் பாக்கோ ஹெர்னாண்டஸ் தலைமையிலான இந்திய ரக்பியின் ஜாம்பவான்களுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள நட்புறவைப் பார்த்து ரஞ்சன், பூபிந்தர் மற்றும் நான் வியப்படைகிறோம். சிறந்த இந்திய பயிற்சியாளரின் ஆதரவுடன், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு உச்சரிப்புகள், வெவ்வேறு கலாச்சாரங்கள் ஆனால் ஒரு புன்னகையால் பிணைக்கப்பட்டுள்ளன.
ரக்பி மீதான அவர்களின் அன்பு மற்றும் பிரேவ்ஹார்ட்ஸ் அவர்களின் உற்சாகமான ஆரவாரத்துடன் பெங்களூருக்கான முதல் சீசன் கோப்பையை உயர்த்த வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எதிர்காலத்தில் இந்த விளையாட்டை விளையாடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்ததற்காக ஜி.எம்.ஆர் மற்றும் இந்திய ரக்பி கால்பந்து யூனியனுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.
டாக்டர் ரஞ்சன் பாய் தலைமையிலான மணிப்பால் குழுமத்தின் இணை உரிமையாளர் பூபிந்தர் சிங் தலைமையிலான இன்க்ரெட் மற்றும் சஞ்சித் ஷெட்டி தலைமையிலான சோஹம் ஆகிய நிறுவனங்கள் பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் அணியின் பங்குதாரர்களாக உள்ளார்கள். அந்த அணியில் டோன் என்ஜி ஷியு, மோஹித் காத்ரி, ஐயோனே டெபா, லியாம் பவுல்டன், அர்பன் செட்ரி உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். முழுமையான அணியில் ஸ்காட் கரி, போல் பிளா வேகு, டோன் என்ஜி ஷியு, சுரேஷ் குமார், ஐயோனே டெபா, மேக் சுங், அகிலா ரோகோலிசோவா, லியாம் பவுல்டன், மோஹித் காத்ரி, அர்பன் செட்ரி, கரண் ராஜ்பர் மற்றும் பிரசாந்த் சிங் ஆகியோர் உள்ளனர். இந்த அணிக்கு புகழ்பெற்ற பிரான்சிஸ்கோ 'பாகோ' ஹெர்னாண்டஸ் பயிற்சி அளிக்கிறார்.
பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ் அணி, ஜூன் 15, 2025 அன்று நடைபெறும் லீக்கின் தொடக்கப் போட்டியில் டெல்லி ரெட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறது.
முழுமையான போட்டிகள்: (பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ்)
ஜூன் 15: டெல்லி ரெட்ஸ்
ஜூன் 16: கலிங்கா பிளாக் டைகர்ஸ்
ஜூன் 17: ஹைதராபாத் ஹீரோஸ்
ஜூன் 19: மும்பை ட்ரீமர்ஸ்
ஜூன் 20: சென்னை புல்ஸ்
ஜூன் 21: சென்னை புல்ஸ்
ஜூன் 22: ஹைதராபாத் ஹீரோஸ்
ஜூன் 23: டெல்லி ரெட்ஸ்
ஜூன் 25: கலிங்கா பிளாக் டைகர்ஸ்
ஜூன் 27: மும்பை ட்ரீமர்ஸ்.