Advertisment

சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்; வருத்தம் இருந்தாலும் எழுந்து நின்று பாராட்டிய சாரா டெண்டுல்கர்

சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 92 ரன்களில் அவுட்; சாரா டெண்டுல்கர் உள்பட ஒட்டுமொத்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு; வைரல் வீடியோ

author-image
WebDesk
New Update
Shubman Gill and Sara Tendulkar

சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 92 ரன்களில் அவுட்; சாரா டெண்டுல்கர் உள்பட ஒட்டுமொத்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு; வைரல் வீடியோ

உலகக் கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் சுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

Advertisment

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 33 ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினார். ஆனால், 2 ஆவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.

இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார். கோலி மற்றும் கில் இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து நிதானமாக ரன் சேர்த்து வந்தனர். விராட் கோலி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார்.

இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 55 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இது உலகக் கோப்பையில் சுப்மன் கில்லின் 2 ஆவது அரைசதம் ஆகும். மேலும், இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் சுப்மன் கில் 12 ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். பதும் நிஸ்ஸங்க மற்றும் பாபர் அசாம் ஆகியோர் 11 முறை அரைசதம் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 10 முறை அரைசதம் அடித்துள்ளனர்.

தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் இந்த உலகக் கோப்பையில் முதல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 92 ரன்களில் ஸ்லோயர் பந்தில் ஆட்டமிழந்தார். கில் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

8 ரன்களில் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில் சோகமாக பெவிலியன் திரும்பினார். அப்போது, சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் எழுந்து நின்று கை தட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Shubman Gill sara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment