நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தவர் சர்ஃபராஸ் கான். இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமானார். அவரது அறிமுகத்தை நேரில் காண அவரது தந்தை நவ்ஸத் மற்றும் சர்ஃபராஸ் கான் மனைவி ரோமனா ஸகூர் ஆகியோர் வந்தனர்.
ராஜ்கோட்டில் நடந்த அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 62 ரன்னிலும், அடுத்த இன்னிங்ஸில் 68 ரன்னிலும் அவுட் ஆனார். சர்ஃபராஸ் கானின் ஆட்டத்தை பார்த்து அவரது தந்தை நவ்ஸத் மற்றும் மனைவி ரோமனா ஸகூர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 4 -1 என்கிற கணக்கில் வென்றது.
இதன்பிறகு, சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அணியில் இடம் பெறவில்லை. இதனிடையே, இரானி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து மிரட்டி இருந்தார் சர்ஃபராஸ் கான். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதை அறிந்த இந்திய அணி நிர்வாகம், அவரை நியூசிலாந்து எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சேர்த்தது.
பெங்களுருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக களமாடிய சர்ஃபராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் -அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியும் 46 ரன்னில் சுருண்டது. ஆனால், 2வது இன்னிங்சில் சர்ஃபராஸ் கான் நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கினார். இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடிய அவர் பெங்களூரு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 150 குவித்து ஆட்டமிழந்தார். இந்தியாவும் 462 ரன்கள் குவித்தது ஆனாலும், நியூசிலாந்திடம் தோல்வி பெற்றது. இருப்பினும், தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார் சர்ஃபராஸ் கான். /indian-express-tamil/media/post_attachments/1f47e983-e96.jpg)
அப்பாவானார் சர்ஃபராஸ்
இந்நிலையில், சர்ஃபராஸ் கான் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கையோடு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். சர்ஃபராஸ் கான் - ரொமானா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவர், தனது குழந்தையை கையில் ஏந்தி போஸ் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/yarLgzTv5Kw1nyVJlCxT.jpg)
சர்ஃபராஸ் கான் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ரோமனா ஸகூரை காதலித்த வந்த நிலையில், அவரை தனது வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ரோமனா டெல்லியில் எம்.எஸ்.சி பயிலும்போது சர்ஃபராஸ் கானை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் சர்ஃபராஸ் கான், தனது காதலை தெரிவித்துள்ளார். இருவரின் திருமணத்துக்கு சர்ஃபராஸ் கானின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், அவர்களின் திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/6d9f1959-493.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“