10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த செவ்வாய்கிழமையுடன் முடிந்தது. இந்த சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் 14.1-வது ஓவரில் 101 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 26 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 102 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு 2 விக்கெட்டை மட்டும் இழந்து 10 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. அதிரடியாக ஆடிய பிலிப் சால்ட் அரைசதம் அடித்து 56 ரன்கள் எடுத்தார். இந்த அபார வெற்றியின் மூலம் ஐ.பி.எல் தொடரில் 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு. அந்த அணி 2-வது தகுதி சுற்றில் வெற்றியை ருசிக்கும் அணியுடன் மோதும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்நிலையில், நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஷ் ஹேசில்வுட் பவுலிங்கை தவறாக கணித்த பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன் ஈகோவை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், பஞ்சாப் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் பிளேஆஃப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணிக்கு பெங்களூரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. 14.1 ஓவர்களில் ஆல் அவுட்டாகிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினர். சில வீரர்கள் தவறான ஷாட்களை ஆட முயன்று தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். குறிப்பாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பந்துகளை ஆடிய விதம் விமர்சனத்தை தூண்டியுள்ளது.
ஹேசில்வுட்டின் பந்து வீச்சில், தான் சந்தித்த மூன்றாவது பந்தை விரட்ட முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் எட்ஜ் கொடுத்து அவுட் ஆனார். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. இந்த நிலையில், ஆட்டத்தின் நிலைமையை தவறாகப் புரிந்துகொண்டதற்காக ஷ்ரேயாஸ் ஐயரை கடுமையாக சாடியுள்ளார் டாம் மூடி. மேலும், ஹேசில்வுட் பந்துவீச்சுக்கு எதிராக மூன்று முறை ஆட்டமிழந்துள்ள அவரது தந்திரோபாயங்களைக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டாம் மூடி பேசுகையில்,"ஷ்ரேயாஸ் விளையாடி தவறவிட்ட முதல் பந்து - ஹேசல்வுட் வீசுவார் என்று நீங்கள் எதிர்பார்க்கும் சரியான லைன். அவர் அதில் விளையாடினார், ஆனால் உண்மையில் அதில் விளையாட விரும்பவில்லை. பின்னர், அந்த மூன்றாவது பந்தில் அவர் அவுட் ஆனார். எனக்கு, அவர் ஆட்ட சூழ்நிலையையும், தனது சொந்த சூழ்நிலையையும் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டார். ஆம், ஹேசில்வுட் கடந்த காலங்களில் அவரைச் சில முறை சந்தித்திருப்பதை அவர் அறிந்திருப்பார். அவருக்கு சரியான எண்கள் தெரியும்.
சில நேரங்களில், உங்கள் ஈகோவை உங்கள் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். எனக்கு அது சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு சரியான உதாரணமாக இருந்தது. உங்கள் பெருமையை விழுங்கிவிட்டு, வெறுமனே குவிப்பதன் மூலம் முன்னேறுவதற்குப் பதிலாக, கடந்த காலத்தில் இருளாக இருந்த ஒன்றைக் கடக்க முயற்சிப்பது நல்லது. நீங்கள் ஹேசில்வுட்டை வெளியே பார்க்க வேண்டியிருந்தது. அது ஒரு எளிய விஷயம், அவரை வெளியே பார்த்து அவர்களின் தாக்குதலின் மீதமுள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்யப் பாருங்கள். ” என்று அவர் கூறியுள்ளார்.
"மறக்க வேண்டிய நாள் அல்ல, ஆனால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். திரும்பிச் சென்று படிக்க நிறைய இருக்கிறது," என்று எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைப் பற்றி ஷ்ரேயாஸ் ஐயர் நினைவு கூர்ந்தார்.