இந்தூரில் நடைபெற்று வரும் ’சையத் முஷ்டாக் அலி’ ட்ராஃபி உள்நாட்டு டி20 தொடரில் சிக்கிம் அணியின் பந்து வீச்சை அதிரடியாக எதிர் கொண்டார் ஷ்ரேயஸ் அய்யர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் அஜிங்கிய ரஹானே முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பிரித்வி ஷா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 4 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர், சூர்ய குமார் யாதவ் ஜோடி 14 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. 33 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 63 ரன்களை சூர்ய குமார் எடுக்க, ஷ்ரேயஸ் அய்யர் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 147 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் 11 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர்களுக்கான பட்டியலில் இடம் பிடித்து வந்த முரளி விஜய்யை, பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் ஸ்ரேயஸ் அய்யர்.