மெல்போர்னில் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்தி டிராவிஸ் ஹெட் கொண்டாடியது, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிடிக்கவில்லை, அவர் அதை "அருவருப்பானது" என்று கூறினார். மேலும், ‘டிராவிஸ் ஹெட், ரிஷப் பண்ட்-ஐ மட்டுமல்ல 150 கோடி இந்தியர்களை அவமட்தித்துள்ளார். அவரை அறைந்திருக்க வேண்டும்; என்று சித்து கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் பேட்டிங்கில் ஒன்றும் சாதிக்கவில்லை. அவர் 2 இன்னிங்சிலும் 0, 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் இந்தியாவை வீழ்த்தினார். ஆஃப் ஸ்பின்னரான டிராவிஸ் ஹெட், 4வது டெஸ்ட்டில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மணி நேரத்துக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.
The story behind THAT celebration from Travis Head on day five 🤣 #AUSvIND pic.twitter.com/hGMYUcZc4E
— cricket.com.au (@cricketcomau) December 31, 2024
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டர் ரிஷப் பண்ட், யாரும் எதிர்பாராத நேரத்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதை டிராவிஸ் ஹெட் கொண்டாடினார். அவர் தனது இடது கையால் ஒரு துளையை உருவாக்கி அதில் தனது வலது ஆள்காட்டி விரலை பலமுறை செருகி ஆபாசமான முறையில் கொண்டாடியது, பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்திய டிராவிஸ் ஹெட் அதை கொண்டாடிய விதம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிடிக்கவில்லை. டிராவிஸ் ஹெட்டின் செய்கையைப் பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அதிர்ச்சி அடைந்தார். அவர் டிராவிஸ் ஹெட்டின் கொண்டாட்டத்தை "அருவருப்பானது" மற்றும் "மோசமான உதாரணம்" என்று கூறினார்.
Travis head’s obnoxious behaviour during the course of the Melbourne test doesn’t auger well for for the gentleman’s game…… sets the worst possible example when there are kids, women , young & old watching the game……. this caustic conduct did not insult an individual but a…
— Navjot Singh Sidhu (@sherryontopp) December 30, 2024
இது 150 கோடி இந்தியர்களுக்கு அவமானம் என்றும், கிரிக்கெட் களத்தில் இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காமல் இருக்க, "கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்" என்று சித்து வலியுறுத்தினார்.
“மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது டிராவிஸ் ஹெட்டின் அருவருப்பான நடத்தை, ஜென்டில்மேன் விளையாட்டிற்கு நல்லதல்ல...... விளையாட்டைப் பார்க்கும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் இருக்கும் போது, மோசமான உதாரணத்தை அமைக்கிறது..... இந்த காரசாரமான நடத்தை ரிஷப் பண்ட்-ஐ மட்டுமல்ல, 1.5 பில்லியன் இந்தியர்களைக் கொண்ட தேசத்தையும் அவமதித்துள்ளார்.....எதிர்கால சந்ததியினருக்குத் தடையாக இருக்கும் கடுமையான தண்டனையாக அவருக்கு அறை கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான், இனிமேல் யாருக்கும் அதைப் பின்பற்ற தைரியம் இருக்காது” என்று சித்து எக்ஸ் பக்கத்தில் எழுதினார்.
இருப்பினும், டிராவிஸ் ஹெட்டின் கொண்டாட்டத்திற்கு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார். “அதை என்னால் விளக்க முடியும். அவன் விரல் மிகவும் சூடாக இருக்கிறது, அவன் அதை ஒரு கோப்பை பனியில் வைக்கப் போகிறான். ஆம், அதுதான். அதுதான் சாதாரணமாக ஓடும் நகைச்சுவை. அது கப்பாவில் இருந்ததா அல்லது எங்காவது, அவருக்கு கிடைத்தது. விக்கெட்டையும் விட்டுவிட்டு நேராக குளிர்சாதனப்பெட்டிக்கு வந்து, ஒரு வாளி ஐஸைப் பிடித்து, விரலை உள்ளே வைத்துவிட்டு, லைனோவின் (நாதன் லியான்) முன்னால் நடந்தான், அது மிகவும் நல்லது பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, அதுதான் வேடிக்கையாக இருந்திருக்கும்” என்று பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.