/indian-express-tamil/media/media_files/QZLQ0ZDzxPaakHOE8Vaz.jpg)
கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்ற தென்னிந்தியா அளவிலான கால்பந்து போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
கோவை புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டிகள் நடைபெறும் ,அதே போல இந்த ஆண்டுக் தென்னிந்தியா அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகள் புலியகுளம் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
14 மற்றும் 17-வயது, ஓபன் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 70 அணிகள் பங்கேற்றனர்.
நான்கு நாட்களாக விறுவிறுப்பாக நடந்த கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 14 வயது பிரிவில் கேரளா அணியும், 17வயது பிரிவில் தஞ்சாவூர் அணியும், ஓபன் பிரிவில் கேரளா அணியும் அபார வெற்றி பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணகுமார் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.