/indian-express-tamil/media/media_files/2025/05/25/hUQ5InDWxhcAaZmTMUKu.jpg)
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது,
IPL 2025, SRH vs KKR LIVE Cricket Score
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களது கடைசி போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும்போட்டியில், சன்ரைசஸ் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இரு அணிகளுமே ப்ளேஅப் வாய்ப்பை இழந்துவிட்டதால் இந்த போட்டி ஒரு சம்பிரதாய ஆட்டமாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில், அபிஷேக் நாயர் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்து அசத்தினர்.
அதிரடியாக சிக்சர் பவுண்டரி அடித்த அபிஷேக் சர்மா 16 பந்துகளில், 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ளாசன் டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்து அசத்தியது. அதிரடியாக ஆடிய ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார்.
40 பந்துகளை சந்தித்த அவர் தலா 6 சிக்சர், 6 பவுண்ரியுடன் 76 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இஷான் கிஷன் 20 பந்துகளில், 4 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணி வீரர்களை அவர வைத்த க்ளாசன், அரைசதம் கடந்த நிலையில், 17 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 37 பந்துகளில் சதம் கடந்து வியக்க வைத்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு, 278 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஐதராபாத் அணி ஐபிஎல் வராலாற்றில், 5-வது முறையாக, 250 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த ஸ்கோர் ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட 3-வது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் 2இடங்களிலும் ஐதராபாத் அணியே உள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த க்ளாசன், 39 பந்துகளில் 9 சிக்சர்7 பவுண்டரியுடன் 105 ரன்களும், அனிகேத் வர்மா 6 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன், குயிண்டன் டீகாக் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக இன்னிங்சை தொடங்கனாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனது. டீகாக் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சுனில் நரைனில், அதிரடியாக 16 பந்துகளில், 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் ரஹானே 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்களும், ரகுவன்ஷி 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும், ரின்கு சிங் 6 பந்துகளில் ஒரு சிக்சருடன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸல் வந்த வேகத்தில் பந்திலேயே டக்அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். 5 பந்துகளை சந்தித்த ரமன்தீப் சிங் 2 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
110 ரன்களுக்கு கொல்கத்தா 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், இறுதிக்கட்டத்தில் மனிஷ் பாண்டே, ஹர்ஷித் ராணா ஆகியோர் அதிரடியில் இறங்கினார். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 162 ரன்களை எட்டியபோது மணிஷ்பாண்டே 23 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த வைபவ் அரோரா தான் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், இறுதிக்கட்டததில் அதிரடியாக விளையாடிய ஹர்ஷித் ராணா, 21 பந்துகளில், 2 பவுண்டரி 3 சிக்சருடன், 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 15.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இமலாய வெற்றியுடன் தொடரை முடித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.