Advertisment

8 மாத சட்டப் போராட்டம்: செக்ஸ் புகாரில் இருந்து இலங்கை வீரர் விடுதலை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா மீது 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அதில் மூன்று கடந்த மே மாதம் கைவிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Sri Lankan cricketer Danushka Gunathilaka

குணதிலகா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார் அவரை கைது செய்தது இருந்தனர்.

srilanka cricketer Danushka Gunathilaka: 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடந்து. இந்த தொடரில் தகுதிச் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியது. இதனால், தாயகம் திரும்ப இலங்கை அணி தயாரான சில மணிநேரங்களுக்கு முன்னர், வீரர்கள் தங்கியிருந்த ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் வைத்து இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார் கைது செய்தனர்.

Advertisment

பெண் தனது புகாரில், இலங்கை வீரர் குணதிலகாவும் தானும் டேட்டிங் செயலி மூலம் சந்தித்தாகவும், சிட்னியில் ஒன்றாக பீட்சா சாப்பிடுவதற்கு முன்பு, ஒபேரா பாரில் மதுபானம் அருந்தியதாகவும் கூறினார். போலீஸ் மற்றும் நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குமூலங்களில், குணதிலகா தனது பிட்டத்தில் அறைவது, வலுக்கட்டாயமாக முத்தமிடுவது, உதடுகளைக் காயப்படுத்துவது மற்றும் உடலுறவின் போது மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இடைநீக்கம் செய்தது. அதுமுதல் அவர் ஆஸ்திரேலியாவில் தான் இருந்தார்.

32 வயதான தனுஷ்கா குணதிலகா மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அதில் மூன்று கடந்த மே மாதம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் 'தான் குற்றமற்றவர்' என நிரூபிக்க சிட்னியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க குணதிலகா சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹகெட் முன்னிலையில் நான்கு நாட்கள் நீண்ட விசாரணையை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து சிட்னி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நீதிபதி சாரா ஹகெட் அளித்துள்ள தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஆணுறையை அகற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை ஆதாரங்கள் நிறுவுகின்றன. ஏனென்றால் அந்த உடலுறவு தொடர்ச்சியாக இருந்தது. போலீசார் அவரிடம் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர் உண்மையாக இருக்க தன்னால் முடிந்ததைச் செய்தார் என்று ஒரு தனித்துவமான தோற்றத்தை அளித்தார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதை நிராகரிக்கவோ அல்லது நம்பாமல் இருக்கவோ எந்த காரணமும் இல்லை. புகார்தாரர் தன்னை சாட்சியாக வெளிப்படுத்தவில்லை. அவர் வேண்டுமென்றே பொய்யான சாட்சியத்தை அளிக்கும் வகையில் உள்ளது. அவரது சில சான்றுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாயம் பூச வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டதாக சாதகமற்ற வெளிச்சத்தில் தோன்றிய சந்தர்ப்பங்கள் இருந்தன." என்று கூறியுள்ளார். 

"நீதிபதியின் தீர்ப்பு அனைத்தையும் கூறுகிறது என்று நான் நினைக்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் நான் திரும்பிச் சென்று கிரிக்கெட் விளையாட ஆவலுடன் இருக்கிறேன்" என்று சிட்னி நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் குணதிலகா கூறினார். 

இலங்கைக்காக 8 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில்  குணதிலகா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment