பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் புவனேஷ்குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியுள்ள இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க்கின் பிட்ச் குறித்து முன்னாள் விளையாட்டு வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க்கின் பிட்ச் டெஸ்ட் மேட்சளுக்கு ஏற்றது இல்லை என்றும், இதுக்குறித்து ஐசிசி தலையீட்டு கவனிக்க வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிட்ச் குறித்தும், புவனேஷ்குமார் பற்றியும் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது. “இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பவுலிங், பேட்ங் இரண்டிற்கும் ஏற்றார் போல் பிட்ச் இருத்தல் வேண்டும். இந்த பிட்ச்சை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்ட புஜாரா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர், ஹாசிம் அம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதே போல் இந்திய வீரர் புவனேஷ்குமார் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னை நிராகரித்து விட்டு இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தவறு செய்துவிட்டனர் என்று புவனேஷ்குமார் நிரூப்பித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.