Advertisment

ஸ்வீடனுடனான தோல்வி எதிரொலி... உலகக்கோப்பைக்கு தகுதிப் பெறுவதில் இத்தாலிக்கு பெரும் சிக்கல்!

அடுத்த போட்டியில் இத்தாலி கடுமையாக ஆடி அதிக கோல் வித்தியாசத்தில் ஸ்வீடனை வீழ்த்த வேண்டியுள்ளது, இல்லையெனில் ஸ்வீடன் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று, இத்தாலி தோல்வி, ஸ்வீடன் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று, இத்தாலி தோல்வி, ஸ்வீடன் வெற்றி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், அடுத்த வருடம் ஜூன் - ஜூலை மாதங்களில் நடக்கிறது. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ரஷ்யா இத்தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது. மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறும். தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், உலக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டம் ஒன்றில், ஸ்வீடனிடம் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து 1958-க்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்த பிளே ஆஃப் போட்டியில், ஸ்வீடன் பதிலி வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார், ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவி கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து சான்சிரோவில் அடுத்த சுற்று பிளே ஆஃப் போட்டியில் இதே ஸ்வீடன் அணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் உலகக்கோப்பையில் தகுதி பெறும் வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் தோய்வோனென் த்ரோ இன் பந்து ஒன்றை தனக்குச் சாதகமாக்கி சக வீரர் ஜேகப் ஜோஹான்சனுக்கு அளித்தார், இவரது ஷாட் டேனியல் டி ரொசி மேல் பட்டு கோலுக்குள் சென்றது. இதனை இத்தாலி கோல் கீப்பர் கியான்லுகி பஃபானால் தடுக்க முடியவில்லை. இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.

சமன் செய்ய அதிகம் மோதிய இத்தாலிக்கு ஒரே வாய்ப்பு மத்தியோ டார்மியன் மூலம் கிடைத்தது, ஆனால் தூரத்தில் இருந்து அடித்த ஷாட் கோல் போஸ்டையே அசைக்க முடிந்தது.

அடுத்து இத்தாலி மிலனில் நடக்கும் போட்டியில் இத்தாலி கடுமையாக ஆடி அதிக கோல் வித்தியாசத்தில் ஸ்வீடனை வீழ்த்த வேண்டியுள்ளது, இல்லையெனில் ஸ்வீடன் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்ய உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும்.

இத்தோல்வி குறித்து பேட்டியளித்த இத்தாலி அணியின் மேனேஜர் வென்ச்சுரா, "நிச்சயம் எங்கள் ஆட்டம் மேம்பட வேண்டும். அடுத்த போட்டிக்கு போதிய இடைவெளி இல்லை. இருப்பினும், அதற்குள் நாங்கள் தயாராக வேண்டும். அதில், நிச்சயம் வெற்றிப் பெறுவோம் என நம்புகிறோம்" என்றார்.

இதற்கிடையே மற்றொரு தகுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்று வீழ்த்தி செனகல் அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment